கிளாப் அடித்து “சீமத்தண்ணி” படப்பிடிப்பினை துவக்கி வைத்த இயக்குநர்!

sarkunam
விதார்த், விஜய் வசந்த் நடிப்பில் உருவாகும் படம் “சீமத்தண்ணி”. இப்படத்தை “கிரேட் எம்பரர் புரொடக்‌ஷன்ஸ்” எனும் புதிய படநிறுவனம் சார்பில் சி.பிரேம்குமார் மிகுந்த பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிகிறார். மேலும் அறிமுக இயக்குனர் விஜய்மோகன் இப்படத்தை இயக்குகிறார். இவர் பல முன்னனி இயக்குனர்களிடம் 25க்கும் மேற்ப்பட்ட படங்களில் துணை, இணை இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் விஜய்மோகன்.

விதார்த், விஜய் வசந்த கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக சாந்தினி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ஹலோ கந்தசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். “மலர்விழி” எனும் முக்கிய வேடத்தில் “சாந்தினீ” நடித்துள்ளார்.

ஒரு ரேஷன் கடையை தன் தாய் வீடாக நினைத்து வாழும் 2 அநாதை நண்பர்களுக்கும், 10க்கும் மேற்ப்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் “தங்கமாரி” எனும் கதாபாத்திரத்திற்க்கும் இடையில் நடக்கும் வாழ்க்கை பதிவுகளை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் யதார்த்தமாகவும், ரசிக்கும் படியும் உருவாகியிருக்கும் படம்தான் இந்த “சீமத்தண்ணி”.

இப்படத்தின் ஒளிப்பதிவு – மாசானி, இசை – திருமூர்த்தி, படத் தொகுப்பு – சி.எஸ்.பிரேம்குமார், சண்டை பயிற்சி – நாதன் லீ, கலை – விஜயராஜன், நடனம் – தினேஷ், ஜாய் மதி, உடைகள் – நடராஜன், பாடல்கள் – நந்தலாலா, சீர்காழீ சிற்பி, மோகன்ராஜ், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – விஜய் K.செல்லையா, தயாரிப்பு – சி.பிரேம்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய்மோகன்.

நேற்று காலை நடைபெற்ற இப்படத்தின் துவக்க விழாவில் படப்பிடிப்பினை கிளாப் அடித்து துவக்கி வைத்தார் இயக்குநர் A.சற்குணம்.

Leave a Response