நடிகர் வாராகி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் தான் ‘சிவா மனசுல புஷ்பா’. இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் இரண்டு நேற்று வெளியிடப்பட்டது. இப்படம் முழுக்க முழுக்க அரசியல் கதைகளம் கொண்டதாகும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா நேற்று சென்னை, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த படத்தின் போஸ்டர்களை நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே கே ரித்திஷ் வெளியிட அதை தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே ராஜன் உடனிருந்தனர்.
மேலும் இப்படத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குநரும் ஹீரோவுமான வாராகி:-
பல தரப்பட்ட அரசியல் சர்ச்சைகளை நிச்சயம் இப்படம் உருவாக்கும். மூன்று நாயகர்களிடம் இக்கதையை கொண்டு சென்றேன். கதையா கேட்டவுடன் யாரும் இதில் துணிந்து நடிக்க வரவில்லை. அதனால் இப்படத்தை நானே தயாரித்தும், இயக்கியும், நானே நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சாதரணமாக அரசியலில் அரசியல்வாதி என்றாலே நல்லவனாக தான் இருக்க வேண்டும். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் அப்படி ஒருவரை அரசியல்வாதியை நாம் பார்ப்பது மிக மிக அரிதாகிறது.
இப்படத்தில் நாயகன் ஒரு பிரபல கட்சியின் உறுப்பினராகவும், நாயகி எதிர்கட்சியின் உறுப்பினராகவும் வருகிறார்கள். இன்னும் இரண்டு மாதத்தில் இப்படத்தினை திரைக்கு கொண்டு வர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.