சவுதி அரேபியாவில் திடீர் தீ!!

thi
சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலம் நஜ்ரானில்தான். அங்கு இந்தியர்கள் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டில் திடீர் என நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. வெளியேற எந்தவித வசதிகளும் இல்லாததால் அந்த அறையில் சிக்கி கொண்டவர்கள் திடீர் மூச்சுதிணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் 10 பேர் இந்தியர்கள் என நஜரானி போலிஸ் அறிவித்துள்ளது மற்றும் படுகாயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Response