தண்ணி காட்டுது மெட்ரோ வாட்டர்!!

lalri
சென்னை:வள்ளுவர்கோட்டத்தில் மெட்ரோ நீர் எற்றநிலையில் குடிநீர் ஏற்று வதற்காக லாரிகள் வரிசையாக நின்றுகொண்டு இருந்த நிலையில் குடிநீர் எடுக்க இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களுக்கும் லாரி ஓட்டுநருக்கும் தகராறு எற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அவர்கள் நண்பர்களுடன் சென்று லாரி ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கட்டையால் தாக்கினர். அதனை கண்டித்து லாரி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தங்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி 150க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டன.

அதனால் தேனாம்பேட்டை,தி.நகர்,மவுண்ட்ரோடு,வள்ளுவர்கோட்டம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. அதன்பின் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் குடிநீர் லாரி ஓட்டுநர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யபடுவார்கள் என உறுதியளித்த பிறகுபோராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Response