தந்தையின் நண்பர்களால் பாலியில் பலாத்காரம் செய்யபட்ட மகள்!!!

RAPE VICTIM_1_0
மும்பயில் ட்ரம்போ பகுதயில் வசத்து வருபவர். உஷா அவரது தந்தையின் நண்பர் ஒருவர் விட்டுக்கு வருவது வழக்கம். கடந்த புதன்கிழமை வழக்கம் போல் வீட்டுக்கு வந்துள்ளார். அப்பாவின் நண்பர் என்பதால் சகஜமாகவே உஷா அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவரும் மிக சகஜமாக வெளியில் செல்லலாம் என்று உஷாவை அழைத்தார். அப்பாவின் நண்பர் தானே என்று உஷாவின் அம்மாவும் அவரை நம்பி உஷாவை அனுப்பிவைத்தார். உஷாவை கஞ்சூர்மார்கில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றார். சில மணி நேரத்தில் வேறு சிலருக்கு அவர் தொலைபேசியில் பேசினார். 19 வயது மதிக்கதக்க மூன்று ஆண்கள் அங்கு வந்தனர். நான்கு பேரும் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி வேறு இடத்துக்கு அழைத்து சென்று மாறி மாறி அவளை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

அதோடு அந்தப் பெண்ணை அவர்கள் விட்டுவிடவில்லை. பல நாட்கள் அவரை தொடர்ந்து இவ்வாறு கற்பழித்துள்ளனர். தன் மகளை காணவில்லை என்று உஷாவின் தாய் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.சில நாட்கள் கழித்து அந்தப் பெண்ணை அவரது வீட்டுக்கு வெளியே விட்டுச் சென்றனர். தனது மகளின் நிலையைப் பார்த்த அவரது தாய் கதறி அழுதார். அந்த பெண்ணை சயான் மருத்துவமனையில் அனுமதித்தார். காவல்துறையினர் அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தனது 11வது வயதில் அவரது தாத்தாவால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.அடுத்து ஒரு உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து அப்பாவின் நண்பர் மற்றும் மூன்று ஆண்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் போன்ற விவரங்கள் விசாரணையில் தெரிய வந்தது.

Leave a Response