சாலையோரத்தில் வாழும் மக்களுக்கு வீடு: அமைச்சர் அறிவிப்பு…

street
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, துறைமுகம் தொகுதியில் தீ விபத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு அதே பகுதியில் வீடுகள் கட்டித்தரக் கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலளித்த, வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், துறைமுகத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் எனத் தெரிவித்தார்.

சென்னையில் ஆற்றுப் படுகைகளில் வசித்த மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்க 20 ஆயிரத்து 366 வீடுகள் கட்டப்பட்டு, 4613 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 4716 வீடுகள் ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். துறைமுகம் தொகுதியில் சாலையோரத்தில் வாழும் முந்நூறு குடும்பத்தினருக்குப் பெரும்பாக்கத்தில் வீடு வழங்கப்படும் என்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Response