தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று பரபரப்பான சூழ்நிலையில் துவங்கியுள்ளது

kuvath
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கூடியுள்ளது. அதை சபாநாயகர் தனபால் தலைமையில் துவங்கியிருக்கிறது. ஜூலை 17 வரை நடக்க இறுக்கும் இந்த கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. அவை துவங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி., உள்ளிட்ட 7 பேரின் மறைவிற்கு இரங்கல் வாசிக்கப்பட்டும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கேள்வி நேரம் துவங்கியது.

கூட்டத்தொடர் இன்று துவங்கியதை அடுத்து சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளது. கடந்த கூட்டத் தொடரின் போது ஏற்பட்ட அமளி, பரபரப்பால் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதை தொடர்ந்து இன்றைய கூட்டத்திலும் கூவத்தூர் பிரச்னை உள்ளிட்டவற்றை கிளப்ப திமுக திட்டமிட்டுள்ளதால், அமளி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.என்றும் கூட்டத்தொடரில் கூறப்பட்டுள்ளன.

Leave a Response