சத்தீஸ்கர் மாநிலம் சுமோவில் நடந்த தாக்குதலில் 4 தமிழர்கள் உட்பட 25 இராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். இந்த தாக்குதலின் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலின் பொது உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினர் உதவி செய்து வந்தனர். மத்திய மற்றும் மாநில அரசுகளும் நிதி உதவிகளை அளித்துள்ளன.
மேலும் இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த கௌதம் காம்பீர் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வீடுகள் வழங்கியுள்ளார்.
விவேக் ஓபராய் தனது கரம் கட்டுமான நிறுவனம் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 25 பிளாட்டுகளை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார். நடிகர் விவேக் ஓபராய் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.