அரசு ஊழியரை மிரட்டிய சமூகநல துறை அமைச்சர்! முதல்வருக்கு கொடுக்கப்பட்ட புகார்!!

meenatchi
நம் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் தலை விரித்து ஆடிவருகின்றனர். அதின் உச்சகட்டமாக சமுகநல துறை அமைச்சர் சரோஜா ஒரு பெண்ணை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்பெண்ணின் கதறல் வெளியே வந்துள்ளது.

அதாவது நான் (ராஜ மீனாட்சி) தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக பணியில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டேன். என் பணியை சரியாக செய்து வருகிறேன். சில நாட்களாக மறைமுகமாக நெருக்கடி வந்தது. பணியைவிட்டு செல்லவே நெருக்கடிவந்தது. அப்போது எதுவும் தெரியவில்லை. ஞாயிறு வீட்டுக்கு வருமாறு அமைச்சர் சரோஜா அழைத்திருந்தார்.
குழந்தைகள் நல பாதுகாப்பு தொடர்பான புத்தகம் வெளியீடு தொடர்பாக சந்திக்க அனுமதி கேட்டிருந்தேன். இதற்காக கடந்த ஞாயிறு அன்று அவரது வீட்டுக்கு சென்றேன். அங்கு அமைச்சர் சரோஜா, அவரது கணவர் உட்பட மூன்று பேர் இருந்தனர். வந்தது முதல் அமர கூட சொல்லவில்லை. ஆரம்பம் முதல் அவர் பேசிய பேச்சு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பெண் அமைச்சர் இப்படி பேசுவாரா என அதிர்ந்தேன். பணிக்காக லஞ்சம் எதிர்பார்த்தனர். குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி பதவி ரூ.10 லட்சம் போகும் என தேவையில்லாமல் பேசியதோடு இல்லாமல் நீ காசு தாரவிட்டால் நீயே ராஜினாமா செய்துவிடு. இல்லையேல் உன்னை பணி இடைநிக்கம் செய்யபடும் என்றும் மேலும் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இதை அடுத்து அமைச்சரின் கணவர் மிரட்டி வந்ததால் மீனாட்சி அவர்களிடம் லஞ்சப்பணமாக 10 லட்சம் கொடுத்துள்ளார். இதன் பின்பு நான் எனது உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலும் மேலும் எனது குழந்ததைகள் மற்றும் எனது பெற்றோகளுடன் சேர்ந்து வாழ சென்னைக்கு பணிமாற்றம் செய்ய விண்ணப்பித்தேன். இதன் தொடர்பாக பேச வேண்டும் என்று அமைச்சர் சரோஜா அழைத்தார் எனவே கடந்த 7.05.2017 அன்று சென்னை சென்று இருந்தேன். அப்போது அமைச்சர் சரோஜாவை பார்த்தேன். அவர் என்னிடம் உனக்கு பணிமாற்றம் வேண்டும் என்றால் மேலும் 20 லட்சம் தருமாறு கேட்டுள்ளார். அவர் என்ன செய்வது என்று அறியாமல் தன் தங்கையுடன் தப்பித்து வந்துள்ளார்.

இவ்வாறு தப்பித்து வந்த மீனாட்சிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்ககோரி தமிழக முதல்வர்க்கு புகார் வேண்டுகோள் விடுத்துள்ளார் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ராஜ மீனாட்சி.
மேலும் இவ்வாறு ராஜ மீனாட்சி கொடுத்துள்ள இப்புகார் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்வார நம் தமிழக முதல்வர்.

Leave a Response