உயிருக்கு போராடிய நிலையில் இருப்பவர் முன்பு செல்பி எடுக்கும் செல்பி பிரியர்கள்…

accident
இன்று நாடு சீறுக்கெட்டு போகிறது என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் ஒன்று திண்டுகல்லில் நடைபெற்று உள்ளது.

அதாவது என்னவேன்றால் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அண்ணாநகரை சேர்ந்தவர் எஸ்தர் (வயது 55). இவர் கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்த இவர் ஊர் ஊராகச் சென்று மதபோதனை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை வத்தலக்குண்டு பஸ் நிலையம் முன்பு சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து போடி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக மீது மோதியது.
இதில் பேருந்தின் முன் சக்கரத்தில் எஸ்தர் சிக்கி படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் அபாயக்குரல் எழுப்பியபடி உயிருக்கு போராடினார். உடனே டிரைவர் தப்பியோடி விட்டார். இதற்கிடையே விபத்து நடந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டனர்.

ஆனால் அக்கூட்டத்தில் யாரும் ஒருவர் கூட அவரை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை. எல்லாரும் தனது செல்போன்களை எடுத்து உயிருக்கு போராடிய எஸ்தர் அவர்களை மனித நேயம் இன்றி புகைப்படம் எடுத்துள்ளனர்.

Leave a Response