அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இது குறித்து வரைமுறைகளை கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வரைமுறைபடுத்தும் திட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் அய்யாதுரை கூறினார்.
மேலும், திட்டத்தை முழு வடிவில் அரசாணையாக தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு நாள் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறினார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.