பாகுபலி 2 முதல் ஷோ : ரசிகர்கள் ஏமாற்றம்….

idreams
பாகுபலி திரைப்படம் தமிழில் வெளியாகாததால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள பாகுபலி படத்தின் 2ஆம் பாகம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ஆனால் தமிழில் மட்டும் வெளியாவதில் சிக்கல் இருந்ததால் காலை திரையிடப்பட வேண்டிய முதல் ஷோ வெளியாகவில்லை. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக திரைப்படம் தமிழில் வெளியாகவில்லை.

இதனையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டு காலை 11.30 காட்சி பாகுபலி தமிழில் வெளியாகிறது. இந்நிலையில் காலை 8 மணிக்கு முதல் ஷோ டிக்கெட் வாங்கியிருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். திரைப்படம் வெளியாகாததால் தியேட்டர் வளாகத்திலேயே ரசிகர்கள் ஏமாற்றாத்துடன் அமர்ந்திருந்தனர்.

Leave a Response