மே 30 முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்…?

unit
இன்று சென்னையில் தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கமும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து நம் மாநில அரசுக்கும் மற்றும் மத்திய அரசுக்கும் 13 கோரிக்கைகள் முன் வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

கோரிக்கைகள் :- 1) திரையரங்குகளில் கட்டணமுறையில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரவேண்டிய காலம் இது. திரையரங்குகளின் தன்மை, இருக்கும் இடம், ரசிகர்களுக்கு தரும் வசதிகள், பண்டிகை நாட்கள் மற்றும் வாரா இறுதி நாட்களில் சிறப்பு கட்டணம் என பலகை மாற்றங்கள் கொண்டுவர அரசு எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

2) திருட்டு வி.சி.டி ஒழிப்பில் மாநில அளவில் காவல்துறையின் சிறப்பு தடுப்பு பணியில் குறைந்தபட்சம் 1000 நபர் கொண்ட டீம் அமைக்க வேண்டும்.இப்போதுள்ள 96 நபர் கொண்ட டீம் போதவில்லை.

3)திரைப்பட துறையினரே இந்த பைரசி தடுப்பு என ஒரு அணி அமைத்து போராட அரசு எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

4) அரசு கேபிள் தலைமையில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் மற்றும், சில தனியார் கேபிள் டி.வி தலைமையில் உள்ள கேபிள் ஆபரேட்டர்களும் எங்கள் திரைப்படங்களை முழுமையாகவும் சில காட்சிகளாகவும், பாடல் காட்சிகளாகவும் 24 மணி நேரமும் தொடர்ந்து ஒளிபரப்பும் கொடுமை நடந்துவரகிறது. இதை இரும்பு கரம் கொண்டு அரசு அடக்கவேண்டும்.

5)உரிமம் இன்றி திரைப்படங்கள் காட்சிகள் ஒளிபரப்பும் பேருந்துகள் அனைத்திற்கும் அதன் தொழில் உரிமம் ரத்து ஆகும் வகையில் அரசு ஆணை பிரப்பிக்க வேண்டும்.

6)ஒரே இடத்தில் இரு திரையரங்குகள் இருப்பின் அவற்றை மல்டிபிள் என்று பெயரிலே கருதவேண்டும்.

7) ஒரு திரையரங்கு உள்ள இடத்தில் இரண்டு அல்லது மூன்ற சிறிய திரையரங்குகளாக மற்றிகொள்ளும் உரிமை உரிமையாளருக்கு தரப்பட வேண்டும். அதற்கான அனுமதிகள் எளிமையாக்கப்பட்ட வேண்டும்.

8)இந்த துரையின் உடனடி வளர்சிக்கு சிறிய அரங்குகள் (மினி தியேட்டர்) மாநிலம் முழுவது கட்டப்படவேண்டும். இதற்கான அனுமதி முறைகள் எளிதாக்கப்பட வேண்டும். மேலும் திரையரங்குகள் புதிதாக அமைக்கவும் புதுப்பித்து கொள்ளவும் அனுமதி, விண்ணப்பம் 60 நாட்களில் வழங்கப்பட வேண்டும்.
(தெலுங்கான அரசு இதனை சிறப்பாக அமல்படுத்தியுள்ளது)

மதிய அரசு கோரிக்கைகள்:- 1) ஜி எஸ் டி என்கிற புதிய வரிகொள்கையில் மிகவும் பாதிப்பில் உள்ளாகியிருப்பது எங்கள் திரைப்பட துறையே.

2)திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு கலை. ஒரு படைப்பு. அப்படி தயாரித்து மக்கள் பார்வைக்கு செல்லும்போது மட்டுமே வணிகம் என்கிற நிலை வருகிறது.எனவே திரைப்படம் முழுமையாகி வெளியிட தயாராகும் வரை மிகவும் குறைந்த பட்ச விதிப்பாக 4 அல்லது 5 சதவிகிதம் மட்டுமே ஜி.எஸ்.டி யாக இருக்க வேண்டும்.

3)திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடும்போது தமிழ் திரைப்படங்களுக்கு குறைவாக ஜி.எஸ்.டி விதிக்கப்பட வேண்டும்.

4) மத்திய அரசு புதிய மற்றும் உரிமம் இல்லாத திரைப்படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள் இதே தொழிலாக செய்து கொள்ளையடிக்கும் தொலைபேசி மற்றும் இணைய சேவை நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். மத்திய அரசாங்கம் இதற்காக தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

5) புதிய திரையரங்குகளுக்கு 5 வருட ஜி.எஸ்.டி மற்றும் பல வித வரிகளில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும்.

6)திரைப்பட தொழிலையும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக நினைத்து மற்ற தொழில் செய்வோருக்கு இருக்கும் அணைத்து வசதிகளையும் மரியாதயையும் அளிக்க வேண்டும்.இது எங்கள் 75 வருட கோரிக்கைகள்.

இந்த எங்கள் 75 வருட கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவேண்டும். மேலும் திருட்டு வி.சி.டி விற்பவர்கள் மற்றும் இணையதளத்தில் படத்தினை ஒளிபரப்புபவர்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்து வருகின்ற மே 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுப்படப்போவதாக எச்சரித்துள்ளனர்.

Leave a Response