தமிழகத்தில் மழை பெய்யுமா: அந்தமான் அருகே புயல் உருவாகியுள்ளது!..

andhaman
வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால், சென்னை, நாகை, கடலூர் , ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே மழை இல்லாமல் தமிழகமே தண்ணீருக்காக தாகத்தில் தவித்துக்கொண்டு இருக்கிறது. எப்போது மழை வரும் என விவசாயிகள் மட்டுமல்லாது, பொதுமக்களும் வானத்தை அண்ணாந்த்து பார்த்த வண்ணம் இருக்கி்ன்றனர்.

இந்நிலையில் தோன்றியுள்ள புயல் சின்னம், மழையை தருமா, காய்ந்து கிடக்கும் வயிறுகளில் பால் வார்க்குமா என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Leave a Response