உ.பி.,ல் தடம்புரண்ட மீரட்-லக்னோ விரைவு ரயில்!..

TRAIN 2
மீரட்-லக்னோ விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து இன்று காலை 4.55 மணிக்கு ராஜ்யா ரானி விரைவு ரயில் புறப்பட்டது. லக்னோ நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், காலை 7.30 மணியளவில் ராம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள கோசி பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயில் தடம்புரண்டது. அதில் 8 பெட்டிகள் தடம்புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர், மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து, காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரயில் பாதையை சீரமைக்க ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Response