வங்கதேச எல்லையில் பிடிபட்ட ரூ.2000 கள்ள நோட்டுகள் பறிமுதல்

இந்திய – வங்கதேச எல்லையில், ரூ. 6.96 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படையின், 24வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் சோரி – அனந்தபுர் எல்லைப்பகுதியில், தகவலின் அடிப்படையில், நேற்று இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பையில் இருந்த கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். வங்க தேச எல்லை பகுதியில் இருந்து இந்திய எல்லை பகுதிக்குள் இந்த ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Response