விமான பயணத்திற்கு ஆதார் கட்டாயம்…

aroplain
உள்நாட்டில் விமானம் மூலம் பயணம் செய்வதற்கும் ஆதார் அல்லது பாஸ்போர்ட்டை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: விமானங்களில் குற்றச்செயல்களை தடுக்க, பயணிப்போரின் அடையாளம் காணப்படுவது அவசியம். இதனால், விமானத்தில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பாஸ்போர்ட் அல்லது ஆதார் கேட்கப்பட்டு பதிவு செய்யப்படும். இது குறித்து அடுத்த வாரம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். 30 நாட்களுக்குள் மக்கள் கருத்து கேட்கப்படும். தொடர்ந்து ஜூன் அல்லது ஜூலைக்குள் திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Leave a Response