இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ள “என்னை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படம், தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையடையவில்லை என்றாலும், ரம்ஜான் விடுமுறை வரக்கூடிய ஜூன் 23-ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படத்தை வெளியிட ஜூன் 23-ஆம் தேதிதான் சரியான தருணம் எனவும், இதற்காக பட வேலையை துரிதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு இன்னும் இரண்டு வார படப்பிடிப்பு மிச்சமிருக்கிறது. ஆனால் விஐபி-2 மற்றும் பவர் பாண்டி ஆகிய பட வேலைகளில் தனுஷ் பிசியாக உள்ளார். ஆனால் எப்படியும் இந்த மாத இறுதிக்குள் என்னை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்வார் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.