எங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்று பதிலளித்த சசி அணி!

leaf
இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அ.தி.மு.க.,வின் சசி அணி தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லது என ஓ.பி.எஸ்., அணி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்த விவகாரம் தற்போது, அக்கட்சியின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் இரண்டு தரப்பையும் நேரில் விசாரித்து நாளை உத்தரவு பிறபிக்க உள்ளது. அதற்கு முன் ஓ.பி.எஸ்., அணி தரப்பில் இருந்து தங்களுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், சசி அணி சார்பிலும் தேர்தல் ஆணையத்தின் இன்று( மார்ச் 21) ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், 1,912 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக, சசி அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response