இரட்டை இலை சின்னம் எனக்கே சொந்தம் !..ஜெ.தீபா.

deepa
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னம் எனக்கே சொந்தம் என்று நிரூபிப்பேன். ‘ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு நான் தான்’ என்று ஜெ.தீபா தெரிவித்து உள்ளார்.அ.தி.மு.க. என்பது ஜெயலலிதாவின் சந்தேக மரணத்திற்கு பிறகு சசிகலா ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் செயல்படுகின்றனர். தொண்டர்கள், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று எனது தலைமையில் மக்கள் ஆதரவோடு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயல்பட்டு வருகிறது. சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிதிமுறைகளை மீறிய செயலாகும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு நான் தான் என்று வாக்காளர்கள் அங்கீகாரமளித்து என்னை வெற்றிபெற வைப்பார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு எனக்கு கிடைக்கும் வெற்றியின் மூலம் இரட்டைஇலை சின்னத்தை எனக்கே சொந்தம் என்பதை நிரூபிப்பேன்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எந்த சின்னம் எனக்கு ஒதுக்கப்பட்டாலும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று என்னை மட்டுமே ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் வாக்களிக்க தயாராக உள்ளார்கள். எனக்கு தொண்டர்கள், பொதுமக்களிடையே நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

திட்டமிட்டு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை கலைத்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவதாக பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். தொண்டர்கள், பொதுமக்களும் ஆர்.கே.நகர் வாக்காளர்களும் இதை நம்பவேண்டாம்.உங்கள் பேராதரவோடு பேரவை சிறப்பாக செயல்பட்டு எதிரிகள் ஏற்படுத்தும் தடைகளை தகர்த்தெறிந்து ஆர்.கே.நகரில் அமோக வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டு எதிர்காலத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் இரட்டை இலை சின்னம் எனக்கே சொந்தம் என்று ஜெ.தீபா கூறினார்…

Leave a Response