மகாராஷ்டிராவில் டயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், பிவாண்டியில் இயங்கி வந்த டயர் தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிட்டத்தட்ட 7க்கும் அதிகமான தீயணைக்கும் வாகனங்களைச் சேர்ந்த தீயணைகும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.