டோலிவுட் பெண் இயக்குனர் ஜெயாவின் ஆடியோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதித்துள்ளார் நடிகர் மகேஷ் பாபு.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது நடித்து வருகின்றார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்தின் நாயகியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் மகேஷ்பாபு, டோலிவுட்டின் பெண் இயக்குனர்களில் ஒருவரான ஜெயா இயக்கி வரும் ‘வைஷாகம்’ படத்தின் பாடல்களை வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளார்.
குறைந்த பட்ஜெட் செலவில் உருவாகும் வைஷாகம் படத்தில் ஹரீஷ் மற்றும் அவந்திகா நாயகன் மற்றும் நாயகிகளாக நடிக்கின்றனர். ஆர்ஜே சினிமா சார்பில் பிஏ ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் பிரபல நடிகர் சாய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிடுமாறு இயக்குனர் ஜெயா, மகேஷ் பாபுவைக் கேட்டுக்கொண்டுள்ளார். நடிகர் மகேஷ் பாபுவும் கண்டிப்பாக கலந்து கொள்கிறேன் என்று உறுதி கூறியுள்ளாராம்.