தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது சாத்தியம் இல்லை என்று கூறும் ஒ.பி.எஸ்.

panni
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை குறித்து பேசுவதற்காக இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்திக்கிறார்.

இதற்காக ஓபிஎஸ் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். அவருடன் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாத, கே.பாண்டியராஜ், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் உள்பட 9 பேர் கொண்ட குழுவும் சென்றது. அப்போது டெல்லியில் செய்தியாளர்களுக்கு ஓபிஎஸ் பேட்டி அளித்தார். அதில் கூறியதாவது: அதிமுகவின் உண்மையான விசுவாசி நாங்கள் தான். அதனால், இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் ஒதுக்கப்பட வேண்டும். ஆ.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிடுவது சாத்தியமில்லை.

அந்த தொகுதியில் போட்டியிடும் எங்களது வேட்பாளர் ஆட்சிமன்ற குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response