நீதிபதிக்கு பிடி வாரண்ட் பிறப்பித்த உச்ச நீதிமன்றம்…

karnan
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக தவறிய சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் இன்று பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. முன்னதாக, இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தற்போது கொல்கத்தா நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றும் சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு சுப்ரீம் கோர்ட் சம்மன் அனுப்பி இருந்தது.

அதன்படி, இன்று அவர் ஆஜராக தவறியதால் பத்தாயிரம் ரூபாய் பிணைத்தொகையை சொந்த ஜாமினாக செலுத்தும் வகையிலான பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

Leave a Response