ஆர்.கே நகரில் தீபா போட்டியா? இன்று மாலை அறிவிக்கப்படும்…

Deepa_Jayakumar
வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, போட்டியிடுவது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது. இதனை அவர்களது தொண்டர்கள் உறுதி செய்துள்ளனர். சசிகலாவை எதிர்த்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியுடன் சேர்ந்து அவர் அரசியலில் ஈடுபடுவார் என்றும், அந்த அணி பலமான அணியாக உருவெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கி தீபா தனியாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த மாதம் 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் தீவிர அரசியலில் குதித்த தீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார். இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதைத்தொரடர்ந்து, ஆர்.கே.நகரில் போட்டியிடுவது பற்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆர்.கே.நகரில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க.வில் இருந்து வேட்பாளர் அறிவிப்பதற்குள் தான் போட்டியிடுவதை அறிவிக்க தீபா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Response