தண்ணீர் இல்லாமல் தவிக்கும்!!! பெங்களூர் வாசிகள்….

WATER1_4_1
தமிழகத்தில் மட்டுமின்றி தற்பொழுது கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவிலும் வறட்சி நிலவுவதால், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வருகின்ற மே மாதத்தில் இருந்து.கர்நாடகாவின் தலைநகரின் பெங்களூரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள உள்ளது. மே மாதம் முதல், ரேஷன் முறையிலேயே தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.கர்நாடகாவில் உள்ள முக்கியமான 9 அணைகளில் 20 சதவீதத்திற்குள் குறைவாக நீர் இருப்பு உள்ளது.

கர்நடக மாநிலம் பெங்களுருவில் மட்டுமின்றி கர்நாடக மாநில முழுவதற்கும் தண்ணீர் சப்ளை செய்வதற்கு கூடுதலாக டேங்கர் லாரிகளும், போர்வெல்களும் தேவைப்படுகின்றன. இதனால் அடுத்து பருவமழை பெய்யும் வரை கர்நாடகாவில் இதே நிலை தான் நீடிக்கும் என கூறப்படுகிறது.இந்தநிலைமை சரியாகும் வரை ரேசன் முறையில் தான் தண்ணீர் விநியோகிக்கப்படும் என கூறபடுகிறது.

இத்தகையச்சூழலில் பெங்களுர் வாசி மக்கள் கோடைகலங்கள் துவங்குவதற்கு முன்பாகவே தண்ணீர் தட்டுப்பாடு பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Response