குளிர்பான ஆலைகலளுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க ஐகோர்ட் அனுமதி!!!!

TamilDailyNews_4185253381730
தாமிரபரணியில் தண்ணீர் எடுத்துக்கொள்ள பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு மதுரை ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது.திருநெல்வேலியில் இருக்கும் தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் பிரபாகரன், அப்பாவு ஆகிய இருவர் சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்தவழக்கை விசாரித்த ஐகோர்ட்டின் மதுரை கிளை குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, இடைக்கால தடையை நீக்க வேண்டும் என ஆலை நிர்வாகத்தினர் மனுதாக்கல் செய்தனர். உபரியாக செல்லும் நீரை தான் பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோரிக்கையை ஏற்று, தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க குளிர்பான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்துள்ளனர்.

Leave a Response