இளைஞர்களின் புதியக்கட்சி துவக்கம் ! நடிகர் விவேக் அறிவுறை…

vivek-story_647_103015120041
புதிய கட்சி தொடங்கியவர்கள் சகாயம், மற்றும் நல்லகண்ணு ஆகிய இருவரிடமும் ஆலோசனை பெறுவது நல்லது என்று நடிகர் விவேக் அறிவுறை கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி இளைஞர்கள் அனைவரும் இணைந்து தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர்,அதில் வெற்றியும் கண்டனர்.

இந்த போராட்டத்தின் ஒன்றாக இணைத்து இளைஞர்கள் அனைவரும் கடந்த 25-ஆம் தேதி “என் தேசம் என் உரிமை” என்ற புதிய பெயர் வைத்து கட்சியை துவங்கினர்.

அதன் பிறகு சமுகவளைதலங்களின் மூலம் தனது கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு தீவிரமாக முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்னர் கட்சியில் இணையதளம் மூலம் முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் இணைந்ததாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், சகாயம்,மற்றும் நல்லகண்ணு ஆகிய இருவரிடமும் ஆலோசனை பெற்றால் நன்றாக இருக்கும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

Leave a Response