கடந்த வருடம் அக்டோபர் மாதம் மறைந்த ஆ.இ.அ.தி.மு.க.வின் முன்னால் முதல்வரும் பொதுசெயலாளரும் ஆனா ஜே.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புதியாதாக துவங்கிய பேரவை நிர்வாகிகளின் பட்டியலை மாற்றி மாற்றி அறிவிக்காதது, அவரது ஆதரவாளர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது கர்நாடகாவில் உள்ள பரப்பான ஆக்ஹ்ரஹர சிறையில் இருக்கும் சசிகலா அம்மையார் ஆ.இ.அ.தி.மு.க. வின் பொதுச்செயலரானதை, ஏற்றுக்கொள்ள முடியாத, அ.தி.மு.க., தொண்டர்களில், ஒரு பகுதியினர், ஜெ., அண்ணன் மகள் தீபாவை, கட்சிக்கு தலைமை ஏற்க வரும்படி, அழைப்பு விடுத்தனர். அதை ஏற்று, பிப்., 24ல், ‘எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை, தீபா துவக்கினார். இதன் செயலராக, தனக்கு அவ்வப்போது கார் ஓட்டும், ராஜாவை நியமித்தார்; அவரது மனைவி சரண்யாவை, தலைவராக்கினார்.இது, அவரது ஆதரவாளர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘மக்கள் கருத்தை கேட்டு, என் அரசியல் பிரவேசத்தை அறிவிப்பேன் என்றவர், யாருடைய கருத்தையும் கேட்காமல், தன்னிச்சையாக செயல்படுகிறார்’ என, குற்றம் சாட்டினர்.
நேற்று முன்தினம்(பிப்.,26) அவரது வீட்டை முற்றுகையிட்ட தொண்டர்களிடம் ,தீப அவர்கள் முழு நிர்வாகிகள் விபரத்தை, நேற்று(பிப்.,27) வெளியிடுவதாக அறிவித்தார். ஆனால், நேற்று நிர்வாகிகள் பட்டியல் எதையும் வெளியிடப்படவில்லை. இதனால் தீபாவின் ஆதரவாளர்கள் அனைவரும் களமிறங்கி செயல்பட்டு வந்த, பல முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவை சந்தித்த தீபாவின் ஆதரவாளர்கள் அனைவரும் கடைசியாக திரு.ஒ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுமாறு தெரிவித்துள்ளனர்.