கலெக்டர் ஆகிறார் பி.வி.சிந்து!!!

sindhu-embed_081716125829

ஆந்திர மாநில அரசு தனக்கு வழங்கிய துணைகலெக்டர் வேலையை ஏற்க பிரபல பேட் மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஒப்புதல் அளித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து வெள்ளிபதக்கத்தை வென்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு ருபாய் 3கோடி  பரிசளித்த ஆந்திர அரசு குருப் -1 பிரிவில் அவர் விரும்பும் வேலையை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது.

தற்போது துணை கலெக்டர்  வேலையை ஏற்க சிந்து விரும்புவதாக அவரது தாயார் விஜயா கூறியுள்ளார்.

சிந்து தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response