தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கு – நடிகர் விஷால் கடிதம்


actor-vishal-cool-stylish-picவிஷால் எழிதிய கடிதத்தில்,

“என் அன்புமிக்க திரையரங்கு உரிமையாளர்களுக்கு வணக்கம்! இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!

வருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி நான் நடித்த கத்திசண்டை மற்றும் அதைதொடர்ந்து பல புதிய திரைப்படங்கள் வெளிவர இருக்கும் நிலையில் நான் உங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள் வைக்கின்றேன். தற்பொழுது அனைத்து திரையரங்குகளிலும் ஆட்டோக்களுக்கு பார்க்கிங் செய்வற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது குடும்பதினர்களுடன் படம் பார்க்க வரும்பொழுது அவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பகல் வேலைகளிலும் ஆட்டோ சவாரிகள் இல்லாதபோதும் அவர்கள் படம் பார்பதற்கு திரையரங்குகளுக்கு தான் வருகின்றனர். இதனால் தியேட்டர் அதிபர்களுக்கு வருமானமே தவிர அவர்களால் நட்டம் ஒன்றும் இல்லை.

மேலும் ஆட்டோ தொழிலாளர்கள் ஒரு திரைப்படம் வெளியாவதர்க்கும், அத்திரைப்படம் வெற்றி பெறுவதற்கும் பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகின்றனர். ஆகவே இக்கடிதத்தின் வாயிலாக அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன், நமது திரைப்படம் வெற்றியடைவதற்கு உறுதுணையாக உள்ள ஆட்டோக்களை பார்க்கிங் செய்வதற்கு அனுமதி அளித்து ஆட்டோ தொழிலாளர் நண்பர்களுக்கு மணமகிழ்ச்சி தரும்படி பணிவன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.


 

Leave a Response