கருண் நாயரை பாராட்டும் சென்னை 28 அணியினர்


chennai-28-press-meet-still500 – 1000 பிரச்சனைகள் மத்தியில் வெளியாகி, அமோக வெற்றி பெற்ற திரைப்படம், வெங்கட் பிரபுவின் சென்னை 28 – II. இந்த அணியினர் தற்போது, சென்னையில் நடைபெற்ற  கிரிக்கெட் விளையாட்டில், இந்தியாவிற்காக  மூன்று சதங்களை அடித்து அசத்தி இருக்கும் கருண் நாயரை வாழ்த்தி இருக்கின்றனர்.

 இது பற்றி வெங்கட் பிரபு,
“சென்னை – 303′  கதாநாயகன் கருண் நாயருக்கு , எங்கள் சென்னை 28 அணியின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். தன்னுடைய வாழ்க்கையில் பல சவால்களையும் , போட்டிகளையும்  சந்தித்து, தன்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றி கண்டு இருக்கிறார் கருண் நாயர். எங்களின் சென்னை 28 II படத்தின் வெற்றியும் ஏறக்குறைய  அவரை போல தான் இருக்கின்றது.
மூன்றாவது சதத்தை கருண் நாயர் அடிக்கும் பொழுது, சென்னை சேப்பாக் விளையாட்டு அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது. அதே போல் விநியோகஸ்தர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் சென்னை  28 II  படத்திற்கு கிடைக்கின்ற பாராட்டுகள், எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. இந்த டெஸ்ட் தொடரில் ஒரு பிரம்மாண்ட வெற்றியை நம் நாட்டிற்கு தேடி தந்த இளம் வீரர்களை எங்கள் அணியின் சார்பில் மனமார பாராட்டுகிறோம். நம் இந்திய அணியின் அசத்தலான கேப்டன் விராட் கோலி எப்படியோ அதே மாதிரி தான் எங்கள் அணியின் யுவன்ஷங்கர் ராஜாவும். எங்கள் ஒட்டுமொத்த குழுவினரும் அவருக்கு பக்கபலமாய் செயல்பட்டது  மட்டுமின்றி, இந்த பிரம்மாண்ட வெற்றியை ஒரு அணியின் வெற்றியாக உருவாக்கி இருக்கின்றனர். நம் இந்திய அணிக்காக விளையாடும்   ஒவ்வொரு ஆட்டக்காரர்களும் நாயகர்கள். அதுபோல தான் எங்களின் சென்னை 28 அணியினரும்.

சென்னை 28 முதல் பாகத்தில் இளம் நடிகர்களாக  நடித்த அனைவரும் தற்போது  வளர்ந்து விட்டனர். ‘திரையுலகிற்கு  ஒரு  கதாநாயகர்கள்  குழுவையே நீங்கள்  கொடுத்து இருக்கிறீர்கள்’ என்று மூத்த கலைஞர்கள் சிலர் சொல்வதை கேட்கும் பொழுது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருக்கின்றது. இது தான்  சென்னை 28 எனக்கு தேடி தந்த பெருமை. வர்த்தக உலகில் ஒரு நிலையான வெற்றியை எங்கள் சென்னை 28 II தழுவி இருக்கின்றது.” என்று கூறியுள்ளார்.


Leave a Response