தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஒரிரு நாட்களில் வீடு திரும்புவார் என அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் கூறியதாவது;
”மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நிலை தேறி வருகிறது. அவர் இரண்டொரு நாட்களில் வீடு திரும்புவார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க டில்லி சென்றுள்ளார். ‛வர்தா’ புயல் பாதிப்புக்கான நிவாரணம் குறித்து, பிரதமரிடம், பன்னீர்செல்வம் பேச வேண்டும். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, கற்பனையாக கூறுவதை பற்றியெல்லாம் நான் கருத்து கூற விரும்பவில்லை.”
என்று ஸ்டாலின் கூறினார்.