ரூ.37 லட்சம் புதிய ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்


rs-2000-noteகாரில் கொண்டுவரப்பட்ட ரூ.37 லட்சம் புதிய ரூ.2000 நேட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே மொடச்சூர் சாலையில் வெள்ளிக்கிழமை போலீஸார் நடத்திய வாகன சோதனையில் காரில் ரூ. 36 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இந்தப் பணம் கமிஷன் அடிப்படையில் மாற்ற கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால், போலீஸார் பணத்தைப் பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இது குறித்து வருமான வரித் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.


 

Leave a Response