சண்டிகரில் டெய்லரிடமிருந்து ரூ.30 லட்சம் பறிமுதல்


2016_12largeimg17_saturday_2016_012624517சண்டிகரில் டெய்லருக்கு சொந்தமான இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் புதிய ரூ.2000 நோட்டுக்கள் உட்பட ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மொகாலி, சண்டிகரில் உள்ள மகாராஜா டெய்லர் என்ற கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ.18 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள். மற்ற நோட்டுகள் ரூ.100 மற்றும் ரூ.50 ஆகும். மேலும், 2.5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

புதிய ரூபாய் நோட்டுகள் எப்படி, யார் மூலம் மாற்றப்பட்டது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Leave a Response