பாரதியாருக்கு கமல் டுவிட்டரில் புகழாரம்


kamal-hassanமகாகவி பாரதியாரின் 134-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை போற்றும் விதமாக பாரதிக்கு கமல் அவரது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘எத்தனை பேரை எழுதவைத்தான் நம் பாரதி! அத்தனை கோடி நன்றி அவ்வாசனுக்கு. முன்னோர் தமிழை என்வரை கொண்டு சேர்த்தமைக்காகவும் கூட..’ என குறிப்பிட்டுள்ளார்.

மகாகவி பாரதியார் ஒரு கவிஞனாக மட்டுமில்லாமல் பத்திரிக்கையாசிரியராகவும், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார்.


 

Leave a Response