சிறந்த சண்டைக் காட்சிக்கும் தேசிய விருது


maxresdefaultசிறந்த சண்டை காட்சிக்கும் தேசிய விருது வழங்குவதற்கான ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது.

’3’, வை ராஜா வை ஆகிய திரைபடங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா தனுஷ். தற்போது சினிமா துறையில் சண்டை காட்சிகளை அமைக்கும் ஸ்டன்ட் மாஸ்டர்களைப் பற்றிய திரைப்படம் ஒன்றை அவர் உருவாக்கி வருகிறார்.

சண்டைக்காட்சி நடிகர்கள் சங்கத்தின் 50-வது ஆண்டை பெருமைப்படுத்தும் வகையில் ‘சினிமா வீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்துக்கு குரல் கொடுக்க ரஜினிகாந்த் சம்மதித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கய்யா நாயுடுவை சந்தித்த ஐஸ்வர்யா தனுஷ், இந்திய சினிமாவுக்கான தேசிய விருதுகள் வழங்கும் பட்டியலில் ஸ்டண்ட் காட்சியை இயக்குவபர்களும் கவுரவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதைக் கருத்தில் கொண்டு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கய்யா நாயுடு அடுத்த ஆண்டு நடைபெறும் 64-வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறப்பான வகையில் சண்டை காட்சிகளை அமைக்கும் ஸ்டன்ட் மாஸ்டருக்கு தேசிய விருது அளிக்க ஒப்புதல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளார்.


 

Leave a Response