தொழிலதிபர்கள் வீட்டில் கைப்பற்றிய பணத்தை நற்பணிகளுக்கு செலவிடலாம்: நடிகர் விஷால்


vishalசென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மொத்தம் ரூ.138 கோடி பணமும், 157 கிலோ தங்கமும் சிக்கி இருக்கிறது.

இதுகுறித்து நடிகர் விஷால் ”சென்னை தொழிலதிபர்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கழிப்பறைகள் கட்ட பயன்படுத்தலாம் எனவும், தொழுநோய் மற்றும் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு நன்கொடை வழங்கலாம்.

மேலும், புளூ கிராசில் உள்ள விலங்குகளுக்கு உணவுகள் அளிக்கலாம். ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிக்கும் மக்களின் உணவிற்காக இந்த பணத்தை வழங்கலாம்  எனறும் கல்வி மற்றும் விவசாயக் கடன்களை அடைக்கப் பயன்படுத்தலாம் என்றும்” தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.


 

Leave a Response