சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்தி வைப்பு


2-1முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தையொட்டி சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் டிசம்பர் 15-ந் தேதி முதல் டிசம்பர் 22-ந் தேதி வரை 14-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் உலகின் பல மொழிகளை சேர்ந்த ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டி, சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் தேதியை ஒத்தி வைத்துள்ளனர். அதன்படி, ஜனவரி 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 

Leave a Response