பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு


m_id_460031_plastic_notesகள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை நாட்டில் அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மக்களவையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதி இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், “பிளாஸ்டிக் கொண்டு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. அதற்கான மூலக்கூறுகளை வாங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது, பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிப்பது குறித்து கடந்த 2015-ம் ஆண்டே ரிசர்வ் வங்கியிடம் தகவல் அளிக்கப்பட்டு விட்டது” என்று அவர் கூறினார்.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒரு கோடி பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து குறிப்பிட்ட சில நகரங்களில் சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் சராசரியாக 5 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்டது. ரூபாய் நோட்டுகளை பேப்பரில் அச்சடிப்பதைவிட பிளாஸ்டிக்கில் அச்சடிப்பது தெளிவானது. முதன்முறையாக ஆஸ்திரேலியா நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 

Leave a Response