மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஸ்ரேயா


shreya-saranசங்கர் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து முன்னணி நடிகையான ஸ்ரேயா அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் தமிழில் மார்கெட்டை தக்க வைக்க முடியவில்லை.

இப்பொழுது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்குப் பிறகு வாய்புகள் வரும் என எதிர்பார்ப்பில் இருந்த ஸ்ரேயா, மித்ரன் ஜவஹர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ராய் லட்சுமி, அருந்ததி நாயர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மூன்று பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.

மீண்டும் ஒரு காதல் கதை, யாரடி நீ மோகினி உட்பட சில படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஸ்ரேயா தெலுங்கில் சிரைஞ்சீவியின் கைதி நம்பர் 150, கவுதமிபுத்ரா சட்டகர்னி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


 

Leave a Response