சசிகுமார் நடிக்கும் ‘பலே வெள்ளையத்தேவா’


sasiநடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகங்களைக் கொண்ட சசிகுமார்  தற்போது நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த கிடாரி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்குகிறார்.

இதில் முக்கிய வேடங்களில் கோவை சரளா, தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.செப்டம்பர் 21-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் இதுவரை பெயரிடப்படாமல் இருந்த இப்படத்துக்கு தற்போது ‘பலே வெள்ளையத்தேவா’ என பெயர் சூட்டியுள்ளனர்.

இதுகுறித்து சசிகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் “பலே வெள்ளையத்தேவா”எங்களது கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 9-வது படத்தின் தலைப்பு” என்று தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்ட போதிலும், கதாநாயகி குறித்த விவரங்களை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 

Leave a Response