காஷ்மீர் எல்லையில் நடந்த மோதலில் 7 பாக். வீரர்கள் பலி


kashmir1-2காஷ்மீர் எல்லையில் இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் உள்ள  எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி  துப்பாக்கியால் சுட்டனர்.

பாக்., ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்களும், ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் இந்திய வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.
ஹிரா நகர் பகுதியில் கடந்த 4 நாட்களாக இந்திய – பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சர்வதேச எல்லை மற்றும் காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதிகளில் 30க்கும் அதிகமான தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளது.


 

Leave a Response