ட்ரம்ப் தவறாக நடந்து கொண்டதாக மேலும் ஒரு பெண் குற்றச்சாட்டு


donald-trumpஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மீது மீண்டும் ஒரு பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இவர் மீது ஏற்கனவே 9 பெண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

நியூயார்க்கை சேர்ந்த யோகா ஆசிரியை கரீனா வர்ஜினியா. இவர் கடந்த 1998ம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது ட்ரம்ப் தவறாக நடந்துகொண்டதுடன் ஆபாசமாக பேசியதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே மன்ஹட்டனைச் சேர்ந்த 74 வயது நிரம்பிய ஜெஸ்ஸிகா லீட்ஸ், 36 வருடங்களுக்கு முன்பு நியூயார்க் நோக்கிய விமானப்பயணத்தின் போது தனது அருகில் இருந்த ட்ரம்ப் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறியிருந்தார்.

மேலும் ரேச்சல் க்ரூக்ஸ் என்ற பெண், ட்ரம்ப் டவரில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் போது தன்னை வலுக்கட்டாயமாக டிரம்ப் முத்தமிட்டதாக கூறினனார். இது போன்ற பெண்களுக்கு எதிராக ட்ரம்ப் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.


 

Leave a Response