நெல்லை அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து. 10 பேர் பலி:

Velankanni-Trivandrum Bus Accident
நெல்லை அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலி என சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பஸ் டிரைவர் துாங்கியதே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது.

விபத்துக்குள்ளான பேருந்து வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரம் சென்றுகொண்டிருந்ததாகவும், திருநெல்வேலி அருகே பனக்குடியை அடுத்து பிளாக்கோட்டை பாறையில் சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 2 குழந்தைகள் உட்பட10 பேர் பலியாகியுள்ளனர். 20’க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இவ்விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். விபத்தால் நெல்லை-நாகர்கோயில் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Velankanni-Trivandrum Bus Accident 2

Leave a Response