பதினொன்றாம் ஆண்டில் சென்னையில் திருவையாறு..!

chennaiyil thiruvaiyaaru

பாரத நாட்டின் அருங்கலைகளில் தென்னிந்தியாவின் “கர்நாடக சங்கீதம்” முக்கியமானதும் முதன்மையானதும் ஆகும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

அவ்வரிய கர்நாடக சங்கீதத்திற்கென்று அனைத்து தரப்பு ரசிகர்களுடன் இளம் தலைமுறையினரும் ஆவலோடு கலந்து கொள்ளக்கூடிய வகையில் புதிய பரிமாணத்தில் கடந்த பத்து வருடங்களாக “சென்னையில் திருவையாறு” என்கிற விழாவினை “லஷ்மன் ஸ்ருதி இசையகம்” (Lakshman Sruthi Musicals) வெகு விமரிசையாக நடத்தி வருகிறது.

பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டும், எண்ணற்ற ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியும், வித்வத்தன்மையிலும், வித்தியாசமான ரசிப்புத்தன்மையிலும், சமூகத்தின் பல்வேறுதுறைகளில் சாதனை புரிந்தோரையும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவோரையும், அறிவுசார் ஆலோசனை வழங்குவோரையும், அருவியாய் கலை நுணுக்கங்களை அளிப்போரையும் தேர்வுக்குழுவாய் அமைத்து, இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை
பூர்த்தி செய்யும் வகையில் கலைஞர்களைத் தேர்வு செய்து காண்போரையும் கேட்போரையும் கனவுலகிற்கே அழைத்துச் செல்லும் கடும் முயற்சிதான் “சென்னையில் திருவையாறு” விழா!

ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில் நிகழக்கூடிய தரமான, அழகான, முழுமையான இசை விழாவாகவும், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் “சென்னையில் திருவையாறு”விழா திகழ்கிறது.

இந்த ஆண்டு எமது இசைவிழாவிற்கு வயது பதினொன்று. இவ்வினிய விழா வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி பிற்பகல் 12.05 மணிக்கு “வியாசை கோதண்டராமன்” அவர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

சென்னையில் திருவையாறு – ஒரு சிறிய அறிமுகம்

‘சென்னையில் திருவையாறு’ என்கிற பெயர் தற்போது உலகெங்கும் உள்ள தமிழர்கள் மற்றும் தென்னிந்திய பாரம்பரிய இசை சார்ந்தோர் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

இந்த இசைவிழா ஏன் இப்பெயரில் நடத்தப்பட்டு வருகின்றது, எப்படி வடிவமைக்கப்பட்டது? என்பதற்கான ஒரு சிறு விளக்கம்தான் இந்த அறிமுகம்.

லஷ்மன் ஸ்ருதி இசையகம் (Lakshman Sruthi Musicals) சார்பாக கடந்த 2005 ஆம் ஆண்டு ஒரு கர்நாடக சங்கீத விழாவை நடத்த ஆலோசனை செய்தபோது, தமிழகத்தில் நடைபெறும் இசைவிழாக்களிலிருந்து சற்றே வித்தியாசமாகவும், தனித்துவத்துடனும் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். அந்த விழாவின் துவக்கமே புதிதாய், நமது கலாசாரத்துடன் ஒட்டியதாய், அனைவர் மனமும் இசையோடு ஒன்றி, அமைதி மற்றும் ஆனந்தம் பெறுகின்ற வகையில் அமைய வேண்டும் என்று சிந்தித்தோம்.

திருவையாறு தியாகராஜரின் ஸ்தலத்தில் வருடந்தோறும் இசைக்கலைஞர்கள் ஒன்றுகூடி, அவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை தெய்வீக உணர்வோடு பாடுகிறார்கள். அந்த இனிய உணர்வுமிக்க இசை அலையை ஏன் சென்னைக்குக் கொண்டு வரக்கூடாது என்று எங்களுக்குள் விவாதித்தோம்.

அப்போது திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவைப் போலவே ஒரு விழாவை சென்னை மக்கள் கண்டுகளிக்கும்படி உருவாக்க எண்ணினோம். இதன் விளைவாகவே ஶ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளோடு இசை விழாவைத் துவங்குவதென்றும், அந்த விழாவுக்கு “சென்னையில்-திருவையாறு” என்று பெயர் சூட்டுவதென்றும் முடிவு செய்தோம்.

மார்கழியும் இசையும்

இப்போது மார்கழி மாதத்துக்கும் இசைக்குமான தொடர்பையும், ‘சென்னையில் திருவையாறு’ விழா எப்படி துவங்கப்படுகிறது என்பதையும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம்…

சங்கீதம் இறைவனின் பேச்சு
சங்கீதம் சாமானியனுக்கும் சர்வேஸ்வரனுக்குமான நேரடித் தொடர்பு
சங்கீதம் கண்ணுக்குப் புலப்படாத கருணை ஊற்று
சங்கீதம் உடைந்த உள்ளத்திற்கு மருந்து
சங்கீதத்திற்குக் கட்டுப்படாதவரையும், தலைவணங்காதவரையும் காண்பது சாத்தியமே இல்லை.
இசை என்ற ஒன்று இல்லாமல் இவ்வுலகில் ஆலயமோ, திருச்சபையோ, பள்ளிவாசலோ, குருத்வாராவோ கிடையாது.

சுருங்கச் சொன்னால் கடவுளைக் காணவும் அடையவும் இசை ஒன்றுதான் வழி. இசைக்கு திசையில்லை, தேசமில்லை, மொழியில்லை, மதமில்லை, சாதியில்லை, பேதமில்லை, நிறமில்லை. இசை மட்டுமே ஒருமை நிலையை உருவாக்கக்கூடியது.

எந்த ஒரு நிர்ப்பந்தமுமின்றி இயற்கையாய் எல்லோர் மனதையும் சென்றடைவது இசையே.

இயற்கை என்பது நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை.இந்த ஐம்பெரும் சக்திகளையும் அடக்கி ஆளக்கூடிய வல்லமை படைத்தது இசை என்றால் அது மிகையாகாது. உலகின் பொது மொழி என்பது மௌனமாகப் பேசப்படும் சைகை மொழி. அதையடுத்து பொதுவான மொழியென்றால் அது இசை ஒன்றே.

இயற்கை அமைப்புகளுக்கு இறைவன் ‘பருவம்’ என்ற ஒரு குறிப்பிட்ட காலத்தை உருவாக்கினான். அதன்படி சில பருவத்தில் மட்டுமே பூக்கும் மலர், பெய்யும் மழை, வீசும் காற்று, கொட்டும் பனி, விளையும் பயிர்கள் என படைத்துள்ளான். அதுபோல் இறைவன் இசைக்கென்றும் ஒரு பருவத்தைப் படைத்திருக்கின்றான். அதுவே மார்கழி. மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள்.
இந்த மாதத்தின் சிறப்புப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடப்படும் மாதம். பகவத் கீதையில்“மாதங்களில் நான் மார்கழி” என்று கிருஷ்ண பரமாத்மாவே குறிப்பிடும் மாதம். தில்லையில் நடராஜர் நடனம் புரிந்த திருவாதிரைத் திருநாள் இடம்பெறும் மாதம் திருவெம்பாவையை மாணிக்கவாசர் அருளிய மாதம். மனுக்குலம் தழைக்க இப்பூவுலகில் மாமரிச்செல்வனாம் இயேசுபிரான் அவதரித்த மாதம். ஹரி நாமசங்கீர்த்தனம் எனும் புனைப்பாடல்களைப் பலர் ஒன்றுகூடிப் பாடும் மாதம். வாசலில் வண்ண வண்ணக் கோலங்களிடும் மாதம். கோவில் கோபுரங்களில் மணியோசைகள் தொடர்ந்திடும் மாதம். ஆலயங்களில் அபிஷேக ஆராதனைகள் இடைவிடாது நடக்கும் மாதம். இப்படி எத்தனையோ சிறப்புகள் சேர்ந்ததுதான் மார்கழி.

அப்படிப்பட்ட மார்கழி மாதமும், இயற்கையை அரவணைத்து வெற்றி கொள்ளும் இசையும் இணைவதே மார்கழி இசை விழா. அதுவே தியாகராஜர் ஆராதனை விழா.

“எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு” என்ற மிகப்பிரபலமான தெலுங்கு பாடலுக்குச் சொந்தக்காரரும் இவரே. எத்தனையோ சங்கீத கர்த்தாக்கள், சங்கீத லக்ஷண கிரந்த கர்த்தாக்கள், சாஸ்திரீய சம்பிரதாயப்படி சங்கீத உருப்படிகளை கர்நாடக சங்கீதத்தில் இயற்றியுள்ளார்கள். இவர்களில் முதன்மையானவராக “ஸ்ரீ தியாகராஜர்” திகழ்கின்றார். இவர் இயற்றிய சங்கீத உருப்படிகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது “பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்”ஆகும். கர்நாடக இசையில் கன ராகங்களாகக் கருதப்படும் நாட்டை, கவுளை, ஆரபி, வராளி மற்றும் ஸ்ரீ ஆகிய ஐந்து ராகங்களில் தியாகபிரும்மம் அவர்கள், தான் வணங்கிய ஸ்ரீராமபிரானைப் போற்றி இயற்றிய ஐந்து பாடல்கள் உலகமெங்கும் இசைக்கலைஞர்களால் இன்றும் பாடப்பட்டு வருகிறது.

மேலும் வாத்தியக்கலைஞர்கள் தாங்கள் இசைக்கும் கருவிகளான ஹார்மோனியம், வீணை, தவில், கஞ்சிரா, மிருதங்கம், முகர்சிங், தபேலா, வேய்ங்குழல் (புல்லாங்குழல்), ஸிதார், ஸாரங்கி, ஸரோட், ஜலதரங்கம், ஸந்தூர்,வயலின், மாண்டலின், ஸாக்ஸபோன், கீபோர்டு மற்றும் பல கருவிகளோடு இந்த ஐந்து கீர்த்தனைகளை இசைத்து வருகின்றனர்.
நாம் சற்று உற்றுநோக்கினால் தென்னிந்திய இசைக் கருவிகளால் இசைக்கப்பட்ட
தியாகராஜரின் கனராக உருப்படிகள் இன்று வடஇந்திய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகளாலும் இசைக்கப்பட்டு வருகின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாக்களில் கலந்துகொள்கிற அயல் நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இவரது பஞ்சரத்ன கீர்த்தனைகள் எப்படியெல்லாம் மதம், மொழி, நாடு, காலம் கடந்து சிறப்புற்று விளங்குகிறது என்பதை அறியும் போது, எல்லோரும் குறிப்பாக ஒவ்வொரு இசைக்கலைஞனும் பெருமை கொள்கிறான். இப்படி பெருமை வாய்ந்த பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைக்கும் வைபவம் ஒவ்வொரு ஆண்டும் தஞ்சைத்தரணியில் அமைந்திருக்கும் திருவையாறில் ”தியாகராஜர் ஆராதனை விழா”என்ற பெயரில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.அறிந்தோரும் அறியாதோரும், கற்றோரும் கல்லாரும், கனிந்து உருகி களிப்பதுவே
”தியாகராஜர் ஆராதனை விழா” என்பது ஆச்சரியம் கலந்த உண்மை.
எண் திசையிலிருந்தும் வந்து பண்பாடும் கலைஞர்களின் ”பஞ்சரத்ன கீர்த்தனைகளை” செவி மடுத்துக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசை ஆர்வலர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில்
உள்ளவர்கள் கூட தியாகராஜரின் கீர்த்தனைகளினால் கவரப்பட்டு “தியாக ப்ரம்ஹ ஆராதனை” விழாவில் கலந்துகொண்டு வருகின்றனர்.

எல்லோரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் கலந்து கொள்வது என்பது இயலாத ஒன்று. அப்படியொரு இசைவிழாவினை சென்னையில் உள்ளோரும் கண்டு, கேட்டு, களிக்கும் வகையில் எமது நிறுவனத்தின் சார்பாக”சென்னையில்-திருவையாறு”என்ற வடிவத்தில் பதினோறாவது முறையாக இவ்வாண்டு அரங்கேற்றுகின்றோம்.

மும்மூர்த்திகளின் ஆசியுடன் தமிழ்த்திருநாட்டின் தலைநகரமாம் சென்னையில் வாழும் இசை உள்ளங்கள் மட்டுமல்லாமல் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து இசை வேட்கையோடு வருகை தரும் ரசிகர்களுக்காக தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்டவரும் நிகழ்வே “சென்னையில் திருவையாறு”.

பாரத தேசத்தின் பாரம்பரிய இசையைப் போற்றிக் காக்கும் வகையிலும் எதிர்கால சந்ததியினருக்கும் களம் அமைத்துக்கொடுக்கும் வகையிலும் கரை புரண்டுவரும் ஒர் அற்புத சங்கமம்தான் “சென்னையில் திருவையாறு”

இவ்வருடம் சரியாக டிசம்பர் 18 ஆம் தேதி மதியம் 2.50 மணிக்கு கர்நாடக சங்கீத கலைஞர்களில் மூத்தவரும் பல்வேறு சிறப்புகளும் பெற்றவருமான மரியாதைக்குரிய “பத்மபூஷண்” பி.எஸ். நாராயணசாமி”அவர்களின் தலைமையில் ஒரே மேடையில் 500 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ”பஞ்சரத்ன கீர்த்தனைகளை” ஒன்றாகச் சேர்ந்து பாடுகின்றனர். பெரியவர், சிறியவர் என்ற வயது பேதமின்றி, புகழ் பெற்ற மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும், ஆண், பெண் வித்தியாசமின்றி அனைத்துக் கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்களும் தங்கள் இசைக்கருவிகள் சகிதம் ஒன்றிணைந்து பாடி, தஞ்சை திருவையாறு ஆராதனை விழாவை நம் கண் முன்னே கொண்டுவர உள்ளார்கள்.

இந்நிகழ்வில் பங்கேற்கும் கலைஞர்கள், பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பார்த்துப் பாடுவதற்காக, தியாகராஜரின் ஐந்து கீர்த்தனைகள் அடங்கிய புத்தகம் விழா துவங்கும் முன் வழங்கப்படும். இந்நிகழ்விற்குப் பிறகு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

”சென்னையில் திருவையாறு”துவக்க விழா

சரியாக மாலை 5.00 மணிக்கு ”சென்னையில் திருவையாறு”சங்கீத வைபவத்தின் துவக்க விழாவினை பரதநாட்டியக் கலைஞர், திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இந்தியாவின் மிகச்சிறந்த நடனக் கலைஞர், ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடன இயக்குநராக பணியாற்றியவர், இந்திய நடனக்கலைஞர்களின் கனவு நாயகன், உலகின் மிகச்சிறந்த பாப் பாடகரும், நடனக்கலைஞருமான மைக்கேல் ஜாக்சனுக்கு இணையாக நடனம் ஆடக்கூடிய வல்லவர் திரு.பிரபுதேவா அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைக்கின்றார்.

இசை ஆழ்வார் விருது
துவக்க விழாவின் சிறப்பம்சமாக ஒவ்வொரு ஆண்டும்”சென்னையில் திருவையாறு”அமைப்பின் சார்பாக கர்நாடக சங்கீத மற்றும் நாட்டிய உலகின் தலைசிறந்த கலைஞர் ஒருவருக்கு அவரது இசைச்சேவை மற்றும் வாழ்நாள் சாதனையை பாராட்டும் விதமாக”இசைஆழ்வார்” என்ற கெளரவ விருதும், தங்கப்பதக்கமும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

அவ்வழியில் இவ்வாண்டு விழாவில் கர்நாடக இசையை மிகத்துல்லியமாய் வழங்கக்கூடியதும், உலக அளவில் எல்லா நாட்டவரும்தமது இசையோடு இணைத்துக் கொள்ளக்கூடிய நுட்பமானதொரு கருவியுமான “வயலின்” இசை மூலம் சாதனைகள் பல செய்தவரும், வயலின் இசைக்கருவியின் வாயிலாக இசைத்துறையில் பல்லாண்டுகளாக சேவை செய்து, பல்லாயிரக்கணக்கான மேடைகளில் இசைத்து, இன்றளவும் பல கலைஞர்களுக்கு முன்னோடியாகவும், ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை தன் இசையால் ஏற்படுத்தி வைத்திருப்பவருமான வயலின் மேஸ்ட்ரோ இசைமாமேதை பத்மஸ்ரீ ”அ.கன்னியாகுமரி”அவர்களின் வாழ்நாள் இசைச்சேவையை பாராட்டும் முகமாக”இசை ஆழ்வார்” பட்டமும் தங்கப்பதக்கமும் வழங்கி கெளரவம் செய்ய உள்ளோம்.

இப்பட்டத்தை தேசிய விருது பல பெற்றவர், இந்த தேசத்தின் தேன்குரல், தென்னிந்தியர்களின் தெவிட்டாத தெள்ளமுது, தமிழர்களின் இசைத்தாய், ஏழிசைக் கலைவாணி, வாழும் சரஸ்வதி ”இசைக்குயில் பி.சுசீலா”அவர்களின் பொற்கரங்களால் அன்னாருக்கு வழங்கி சிறப்பிக்கப்படுகின்றது.

”எம்.எஸ்.சுப்புலட்சுமி”அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி

துவக்க விழாவினைத் தொடர்ந்து கர்நாடக இசைஉலகின் பேரரசி பாரதரத்னா ”எம்.எஸ்.சுப்புலட்சுமி” அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் விதமாக நூறு கலைஞர்கள் பங்கேற்கும் கர்நாடிக் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிகழ்வில் கர்நாடிகா சசிகிரண் அவர்களுடைய இயக்கத்தில் காயத்ரி வெங்கட்ராகவன்,எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் கொள்ளுப்பேத்தி ஐஸ்வர்யா,கீபோர்டு சத்யநாராயணன் ஆகியோர் சிறப்பு பங்கேற்க நடனக் கலைஞர் ஸ்மிதா பக்த மீராவாக நடனமாடும் மாபெரும் இசைவிருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவினைத் தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு பியானோ இசைக்கலைஞர் அனில் சீனிவாசன், பாடகர்கள் நரேஷ் ஐயர், சைந்தவி ஜி.வி.பிரகாஷ், புல்லாங்குழல் கலைஞர் பிரவிண் கோட்கிண்டி ஆகியோர் பங்கேற்கும் சிறப்பு இந்தியப் பாரம்பரிய இசை நிகழ்ச்சியோடு முதல்நாள் நிறைவு பெறும்.

நிகழ்ச்சி நிரல் 2015
லஷ்மன் ஸ்ருதியின் ’சென்னையில் திருவையாறு’ – பருவம் 11

18 – 25 காமராஜர் அரங்கம் டிசம்பர்
18.12.2015 வெள்ளிக்கிழமை
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
பிற்பகல் 12.05 மணி வியாசை கோதண்டராமன் நாதஸ்வரம்
பிற்பகல் 2.50 மணி பி.எஸ்.நாராயணசாமி பஞ்சரத்ன கீர்த்தனைகள்
மாலை 5.00 மணி சென்னையில் திருவையாறு 11 வது ஆண்டு இசைவிழாவை நடனப்புயல்
பிரபு தேவா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி, துவக்கி வைக்கிறார்.
மாலை 5.15 மணி சிருட்டிஸ் கர்நாடிகா வழங்கும் – பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்களுக்கு 100 இசைக்கலைஞர்கள் புகழ் அஞ்சலி (சுதா ராஜா, கர்நாடிகா சசிகிரண், காயத்ரி வெங்கட்ராகவன், S. ஐஸ்வர்யா, கீபோர்டு சத்யநாராயணன், ஸ்மிதா மாதவ்)
இரவு 7.30 மணி அனில் சீனிவாசன் / நரேஷ் ஐயர் / சைந்தவி / பிரவிண் கோட்கிண்டி பாரம்பரிய இந்திய இசை

19.12.2015 சனிக்கிழமை
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
காலை 7.00 மணி உடையாளூர் கல்யாணராமன் நாம சங்கீர்த்தனம்
காலை 9.00 மணி சுபத்ரா மாரிமுத்து பரதநாட்டியம்
காலை10.30 மணி சர்ச்சில் பாண்டியனின் உத்சவ் இசை வழங்கும் – கொண்டாடுவோம் கலாம் கனவுகளை
பிற்பகல் 1.00 மணி விதிஷா பரதநாட்டியம்
பிற்பகல் 2.45 மணி கர்நாடிகா சகோதரர்கள் & துஷ்யந்த் ஸ்ரீதர் சீனிவாச கல்யாணம்
மாலை 4.45 மணி ஓ.எஸ்.அருண் வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி ஷோபனா பரதநாட்டியம்

20.12.2015 ஞாயிற்றுக்கிழமை
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
காலை 7.00 மணி கடலூர் கோபி நாம சங்கீர்த்தனம்
காலை 9.00 மணி எஸ்.ஜெ.ஜனனி வாய்ப்பாட்டு
காலை 10.30 மணி கிருஷ்ணகுமாரி நரேந்திரன் பரதநாட்டியம்
பிற்பகல் 1.00 மணி சாந்தி சுரேஷ் வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணி ஊர்மிளா சத்யநாராயணன் பரதநாட்டியம்
மாலை 4.45 மணி பி.உன்னிகிருஷ்ணன் வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி பர்வீன் சுல்தானா இந்துஸ்தானி வாய்ப்பாட்டு

21.12.2015 திங்கட்கிழமை
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
காலை 7.00 மணி ஹைதராபாத் பி.சிவா திருப்பாவை இசை நிகழ்ச்சி
காலை 9.00 மணி இடா பாலகிருஷ்ணா இந்துஸ்தானி வாய்ப்பாட்டு
காலை 10.30 மணி லால்குடி ஜி.ஜெ.ஆர். கிருஷ்ணன் &
விஜயலட்சுமி வயலின்
பிற்பகல் 1.00 மணி ஸ்ருதி லேகா பரதநாட்டியம்
பிற்பகல் 2.45 மணி திரிச்சூர் பிரதர்ஸ் வாய்ப்பாட்டு
மாலை 4.45 மணி ராஜேஷ் வைத்யா வீணை
இரவு 7.30 மணி கத்ரி கோபால்நாத் சாக்ஸஃபோன்

22.12.2015 செவ்வாய்க்கிழமை கலைஞர்கள் பிரிவுகள்
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
காலை 7.00 மணி சுசித்ரா ஹரிகதா
காலை 9.00 மணி கே.திவ்யா தேவி பரதநாட்டியம்
காலை 10.30 மணி நர்த்தகி நடராஜன் பரதநாட்டியம்
பிற்பகல் 1.00 மணி வித்யா கல்யாணராமன் வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணி நிர்மலா ராஜசேகர் வீணை
மாலை 4.45 மணி மஹதி வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி நித்யஸ்ரீ மகாதேவன் வாய்ப்பாட்டு

23.12.2015 புதன்கிழமை
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
காலை 7.00 மணி பூர்ணிமா ஹரிகதா
காலை 9.00 மணி பாரதி திருமகன்
கலை மகன் சங்கீத உபன்யாசம்
காலை 10.30 மணி மதுரை முரளிதரன் வழங்கும் அவதார புருஷன்
பிற்பகல் 1.00 மணி அஸ்வத் நாராயணன் வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணி ஹரிணி வாய்ப்பாட்டு
மாலை 4.45 மணி பிரியா சகோதரிகள் வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி ஹரி சரண் வாய்ப்பாட்டு

24.12.2015 வியாழக்கிழமை
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
காலை 7.00 மணி மணிகண்டன் பக்தி பிரசங்கம்
காலை 9.00 மணி ரித்விக் ராஜா வாய்ப்பாட்டு
காலை 10.30 மணி பிரசன்னா கிட்டார்
பிற்பகல் 1.00 மணி மீனாட்சி ராகவன் பரதநாட்டியம்
பிற்பகல் 2.45 மணி ரேவதி கிருஷ்ணா வீணை
மாலை 4.45 மணி எஸ்.செளம்யா வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி விஜய் பிரகாஷ் வாய்ப்பாட்டு

25.12.2015 வெள்ளிக்கிழமை
நேரம் கலைஞர்கள் பிரிவுகள்
காலை 7.00 மணி செங்கோட்டை ஹரி நாம சங்கீர்த்தனம்
காலை 9.00 மணி கவிதா ராமு பரதநாட்டியம்
காலை 10.30 மணி ஷோபனா விக்னேஷ் வாய்ப்பாட்டு
பிற்பகல் 1.00 மணி டாக்டர்.கணேஷ் வாய்ப்பாட்டு
பிற்பகல் 2.45 மணி ஷோபா சந்திரசேகர் வாய்ப்பாட்டு
மாலை 4.45 மணி அருணா சாய்ராம் வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி கார்த்திக் வாய்ப்பாட்டு

19ஆம் தேதி முதல் தினமும் ஏழு நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 7.00 மணிக்குத் துவங்கி, இரவு 10.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசையுலகின் மூத்த இசைக்கலைஞர்களும், வளர்ந்து வரும் திறமையாளர்களும், நாட்டியக் கலைஞர்களும் சேர்ந்து மொத்தம் ஐம்பத்து மூன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். மேலே உள்ள பட்டியலில் காணப்படும் ஒவ்வொரு கலைஞரும் ஒவ்வொரு விதமான வகையில் இவ்விழாவிற்காக மிக நுணுக்கமான வகையில் பயிற்சியும் முயற்சியும் செய்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.

காமராஜர் அரங்கத்தில் திருவையாறு தியாகராஜர் ஆராதனை மண்டபத்தை நம் கண்முன்னே கொண்டுவரும் வகையில் பிரம்மாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடை, பாடுவோர்க்கும், இசைப்போர்க்கும், நடனமாடுவோர்க்கும், நிகழ்ச்சியைக் காண்போர்க்கும் சந்தோஷமளிக்கும் வகையில் இருக்கும்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலை உலகின் மூத்த கலைஞர் ஒருவர் கலந்துகொண்டு இசைக்கலைஞர்களையும், பாடகர்களையும், நடனமணிகளையும் கௌரவிப்பார்கள்.

அரங்கத்தின் எல்லா இடங்களிலும் சீராகக் கேட்கும் படியான செவிக்கினிய ஒலி அமைப்பும், கண்கவர் ஒளி அமைப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அரங்கின் எல்லா பகுதிகளிலிருந்தும் இசைக்கருவிகளையும் பாடகர்களையும் நடனக்கலைஞர்களையும் அவர்களது திறமைகளை துல்லியமாகக் காணும் வகையில் மேடையின் இருபுறமும் அகன்ற திரைகள் அமைக்கப்படுகின்றன.

”சென்னையில் திருவையாறு” நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, கடந்த பல வருடங்களாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.
லட்சக்கணக்கான இசை ரசிகர்கள் கண்டுகளிக்கும் இத்தொடர் இசை நிகழ்ச்சிகள் இவ்வாண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.

நுழைவுச்சீட்டுகள் கண்கவர் விதமாகவும், கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையிலும் புதுமையாகவும் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது.

அனைத்து நிகழ்ச்சிகளையும் காண்பதற்கென தொடர் அனுமதிச்சீட்டும் (Season Ticket) தனித்தனியாக தேர்ந்தெடுத்து நிகழ்ச்சிகளைக் காண்பதற்கான தனியாக ஒரு அனுமதிச்சீட்டும் (Individual Show Ticket) ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மொத்தமாக நுழைவுச் சீட்டுகள் (BulkBooking) வாங்குவோருக்கும், பொதுசேவை நிறுவனங்கள், கலை மன்றங்கள், கல்வி அமைப்புகள் மற்றும் பொழுது போக்கு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்.

ரசிகர்களின் வசதிக்காக அனுமதி சீட்டுகள் காமராஜர் அரங்கம் – தேனாம்பேட்டை, லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ் – வடபழநி, எம் 6 ஈவண்ட்ஸ் – சி.ஐ.டி நகர் நந்தி சிலை அருகில், நாயுடு ஹால் – அண்ணா நகர், தி நகர், புரசைவாக்கம், சத்யா – மேற்கு மாம்பலம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இணையதளம் மூலமாக (Online Ticket Booking) டிக்கெட் முன்பதிவு செய்யவும் கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலம் டிக்கெட்டுகளைப் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது
www.lakshmansruthi.com, www.vikatan.com, www.bookmyshow.com, www.ticketnew.com, www.eventjini.com, www.indianstage.com, www.meraevents.com

”சென்னையில் திருவையாறு” நிகழ்ச்சிகள் பற்றி விவரங்கள் அறியவும், டிக்கெட்டுகள் வாங்கவும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ் மூலமாக பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். CT APPS என்ற இந்த ஆண்ட்ராய்டு ஆப்ஸ் வசதியை டிக்கெட்நியூ.காம் இசை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக வழங்குகிறது.

மேலும் டிக்கெட் விவரங்களை தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ள:
044-44412345, 044-428 67778, 9841907711, 9941922322, 88070 44521

ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு காமராஜர் அரங்கத்தை ஒட்டியிருக்கும் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காங்கிரஸ் மைதானத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாள்தோறும் பல ஆயிரம் பேர் கூடுவதால், அரங்கின் வெளி மண்டபத்தில் பல்வேறு விதமான விற்பனையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இசைத்துறை பற்றிய கண்காட்சிகள், இசைக்கருவிகள், கலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், அழகு சாதனங்கள், ஆடை அணிகலன்கள், உணவுத் தயாரிப்பு தொடர்பான புத்தகங்கள், டி.வி.டி க்கள், சி.டி க்கள், ஆன்மிக புத்தகங்கள், பூஜை பொருட்கள், இசைக்கருவிகள் குறித்த புத்தகங்கள் கொண்ட அரங்குகளும் இடம் பெறுகின்றன. மேலும் பதிப்பகங்கள், வங்கிகளின் வாடிக்கையாளர் மையங்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவன மையங்கள், சமூக சேவை மையங்கள், வீட்டுமனை விற்பனையாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.

இலவச இரவுப்பேருந்து

ரசிகர்களின் வசதிக்காக தினமும் இரவு 7.30 மணி காட்சி நிறைவுற்றதும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வசதியாக சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு காமராஜர் அரங்கத்திலிருந்து இலவசமாக பேருந்துகள் (Free Buses) இயக்கப்படும். உதவி : ஸ்ரீ பாக்யலஷ்மி டூர்ஸ் & டிராவல்ஸ், 4666 4666 www.sblt.co.in

பாரதரத்னா ஏ.பி.ஜே.அப்துல்கலாம் திருவுருவச் சிலை

சென்னையில் திருவையாறு 10 ஆம் ஆண்டு இசை விழாவினை துவக்கிவைத்து பெருமை சேர்த்த பாரத ரத்னா“ஏ.பி.ஜே.அப்துல் கலாம்” அவர்களின் அசல் திருவுருவ மெழுகுச்சிலை லண்டன் வேக்ஸ் மியூசியத்தில் உள்ளது போல் காமராஜர் அரங்க வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. இத்திருவுருவச் சிலையுடன் ரசிகர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. உதவி: வேல்ஸ் பல்கலைக்கழகம், பல்லாவரம்.

அறிவுத்திறன் போட்டி மூலம் ரசிகர்களுக்குக் குவியும் பரிசுகள்:

அரங்கிற்குள் வருகின்ற ரசிகர்கள், நுழைவு வாயிலில் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் அறிவுத்திறன் கேள்விக்கான பதிலை தங்கள் நுழைவுச் சீட்டில் குறிக்கப்பட்டிருக்கும் பகுதியில் எழுதி, அரங்கில் பணியாளர்கள் கொண்டு வரும் பெட்டிகளில் சேர்க்க வேண்டும்.

மேடை நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞரின் கரங்களால் நிகழ்ச்சியைக் காணும்
ரசிகர்களில் ஐந்து பேரை குலுக்கல் மூலமாக தேர்ந்தெடுத்து சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். அதுவும் குறிப்பிட்ட அந்தக் கலைஞரே ரசிகர்களுக்குப் பரிசுகள் வழங்குவது சிறப்பம்சமாகும். சக்தி மசாலா,சௌபாக்யா, சத்யா, தி சென்னை ஹோம்ஸ், அருள் அப்பளம் ஆகிய நிறுவனங்கள் சார்பாக 5 சிறப்பு பரிசுகள்வழங்கப்படும்.

கோ ப்ரசென்டட் ஸ்பான்சர் செய்யும் சத்யா நிறுவனம் நிகழ்ச்சியைக் காண வரும்
ஒவ்வொரு ரசிகருக்கும் 500 ரூபாய் மதிப்பிலான பரிசுக் கூப்பன் வழங்க உள்ளது.

ரசிகர்களை அதிசயிக்க வைக்கும் பம்பர் மற்றும் மெகா பரிசுகள்:

நிகழ்ச்சியின் நிறைவு நாளன்று, எட்டு நாட்களிலும் கலந்து கொண்ட அனைத்து ரசிகர்களிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்கா செல்வதற்கான இரண்டு விமான டிக்கெட்டுகள் கும்பகோணம் ”அரசு ஜுவல்ஸ்”நிறுவனத்தின் சார்பாக பம்பர் பரிசாக வழங்கப்படும்.

உணவுத்திருவிழா: 2015

”சென்னையில் திருவையாறு”இசை விழாவுடன் உணவுத்திருவிழா எப்படி இணைந்தது ?

”செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்பர்.
”சென்னையில் திருவையாறு”இசை விழாவில், ரசிகர்களின் செவிகளை திகட்டத் திகட்ட நிரப்பும் தேனினும் இனிய இசை விருந்துக்குப் பஞ்சமில்லை. ஆனால் காலை 7.00 மணிக்குத் துவங்கி இரவு 10.00 மணி வரை நடைபெறும் இடைவிடா இசை மழைக்கு இடையே தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு காபி குடிக்க வேண்டும் என்றால் கூட காமராஜர் அரங்கில் இருந்து வெளியேறி, சாலையைக் கடந்து சிறிது தூரம் நடந்து, கடையைத் தேட வேண்டியிருக்கும். தரமான உணவகம் கண்டுபிடித்து சாப்பிட்டுத் திரும்புவதற்குள், போதும் போதுமென்றாகிவிடும்.

அதேபோல் வழக்கமாக இசைவிழா நடக்கின்ற அரங்கங்களில் ஒரு குறிப்பிட்ட உணவகம் மட்டுமே இடம்பெறும். அதில் என்ன கிடைக்கின்றதோ அதை மட்டுமே
சாப்பிட வேண்டும். தொடர்ந்து பல நாட்களுக்கு நடைபெறும் இதுபோன்ற இசை விழாக்களில் தினமும் ஒரே உணவகத்தின் உணவு வகைகளை வேறு வழியின்றி ரசிகர்கள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது.

ரசிகர்களின் செவிக்கு பல்வேறு இசை வடிவங்கள் கேட்கக் கிடைப்பது போல், வயிற்றுக்கும் பல்வேறு உணவு வகைகள் கிடைத்தால் ஏராளமான ரசிகர்கள் விழாவுக்கு வருவார்கள் என்ற நோக்கத்தில் உணவுத்திருவிழாவினை வடிவமைத்தோம். மற்றும் குறிப்பாக, வெளிநாட்டு ரசிகர்களிடையே இந்த உணவுத்திருவிழா மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

திரைகடலோடியும் திரவியம் தேடும் அந்த அன்பர்கள், அந்தத் தேடலில் தொலைக்க நேரிடும் விஷயங்கள் ஏராளம். அன்னையின் அரவணைப்பு, தந்தையின் அன்பு, சகோதர பாசம், நண்பர்களின் நேசம், மண்வாசம்… என்று அவர்களின் ஏக்கப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதில் முக்கியமானது நம் பாரம்பரிய உணவு.

ஒரு சில நாட்கள் தமிழகம் தாண்டி சுற்றிவிட்டு வந்தாலே, நாக்கு வெறுத்து… வெறும் ரசம் சாதம் கிடைத்தால் கூட போதும், தேவாம்ருதமாக இருக்கும் என்ற நினைப்பு வருவதை யாரும் மறுக்க முடியாது. அப்படி இருக்கும்போது ஆண்டுக் கணக்கில் அயல்நாட்டில் வசித்து பீட்ஸா, பர்கர், கோக்… என்று சாப்பிட்டு சலித்துப் போனவர்கள், சொந்த ஊருக்கு வரும்போது தங்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறேதும் இல்லை.

டிசம்பர் சீசனில் சென்னை வரும் அந்த நண்பர்கள், தங்கள் குடும்பத்தினரோடு இசை நிகழ்ச்சிகளை ரசித்துவிட்டு, இடையில் நல்ல உணவுக்காக அலைய நேர்ந்தால் அது நமக்குதானே இழுக்கு!

நமது அன்புக்குரிய ரசிகர்கள் இப்படி அவஸ்தைப்படக் கூடாது என்பதற்காகவும் ”சென்னையில் திருவையாறு” இசைவிழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று பல வெளிநாட்டு வாழ் நண்பர்கள் விரும்பிக் கூறுவதாலும், உணவுத்திருவிழாவினை திட்டமிட்டு அறிமுகப்படுத்தினோம்.

பிரபல திரைப்பட இயக்குநர் திரு.கே.பாக்யராஜ் அவர்கள் உணவுத்திருவிழாவையும், 30 அடி உயர, முருங்கைக்காய்களால் வடிவமைக்கப்பட்ட, உலக பிரசித்திபெற்ற ஈஃபில் கோபுரத்தையும் 18.12.2015 வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார்.

உணவுத்திருவிழாவின் சிறப்பு அம்சமாக இந்த ஆண்டு வீடுகளில் மாடித் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு உதவுவதற்காக சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாடித்தோட்டம் வடிவமைத்தல், பராமரித்தல், உபகரணங்கள், விதை, உரம் மற்றும் அனைத்து விவரங்களையும் இத்துறையில் சிறந்த வல்லுநர்கள் செய்முறை விளக்கம் அளிக்க உள்ளார்கள். மூலிகை செடிகள் வளர்ப்பதற்கான சிறப்பு விளக்கங்களும் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முப்பதாயிரம் சதுர அடியில் அமைக்கப்படும் பிரமாண்டமான அரங்கத்திற்குள் தமிழகத்தின் முன்னணி உணவகங்களின் நாற்பதுக்கும் மேற்பட்ட உணவு அரங்கங்களும், 300 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையிலான வசதிகளும் செய்யப்படுகின்றன.

பசியாற்றும் உணவகங்கள் மட்டுமே என்றில்லாமல், உணவுத்திருவிழாவின் ஒரு பகுதியில் தனி மேடை அமைக்கப்பட்டு, தமிழகத்தின் தலைசிறந்த சமையல்கலை வல்லுநர்களின் அனுபவங்கள், பிரபல சமையல் கலைஞர்கள் மற்றும் உணவுக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் செயல் விளக்க நிகழ்ச்சிகள், பார்வையாளர்களும் பங்கேற்று தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் சமையல் கலைப்போட்டிகள், ஒவ்வொரு போட்டியிலும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள், உடல் ஆரோக்கியம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவுகள், நாள் முழுக்க நடக்கும் உணவுத் திருவிழாவின் இடையே மேடைக்கும் உணவரங்கங்களுக்கும் வந்து செல்லும் இசையுலக ஜாம்பவான்கள்,திரைப்பட நட்சத்திரங்கள், சின்னத்திரை பிரபலங்கள், சமூகத்தின் பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்கள், ஆகியோர் அனைவரையும் அருகில் கண்டு பேசி மகிழும் வாய்ப்பு, சிறுவர்களுக்குண்டான பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் விளையாடுவதற்கான வசதிகள், குழந்தைகளோடு வரும் ரசிகர்களையும் திருப்திப்படுத்த சிறுவர்களைக் கவரும் உணவு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பனிக்கட்டிகளில் வித்தியாசமான கலைப்படைப்புகளையும், சிற்பங்களையும் செதுக்கும் அரங்குகள், நிபுணர்கள் வழங்கும் சமையல் குறிப்புகள் என்று பல வித்தியாசமான ஏற்பாடுகள் இந்த உணவுத் திருவிழாவின் சிறப்பம்சங்களாக அணிவகுக்கின்றன.

இந்த வகையில் பிரபல உணவகங்கள் தங்கள் சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் தரமான உணவு வகைகளை, ஒரே இடத்தில் நீங்கள் விரும்பும் வகையில் வழங்குகின்ற பாங்கு இசைப்பிரியர்களை ஈர்த்து திக்கு முக்காட வைக்க இருக்கிறது. தானிய வகை உணவுகளும், காய்கறி உணவுகளும், கீரை மற்றும் பழவகை உணவுகளும் இங்கே சுடச்சுட மணக்க இருக்கின்றன. இவ்வாறாக பல்வேறு சிறப்பம்சங்களோடு உணவுத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.

அதேபோல் உணவுத்திருவிழாவினை மட்டுமே காண வருவோர் காமராஜர் அரங்கத்திற்கு உள்ளே என்ன நடக்கின்றதென்று எட்டிப் பார்க்கின்ற வேளையில், சங்கீதத்தில் நீந்துகின்ற வாய்ப்பு ஏற்படும். கர்நாடக இசையில் ஆர்வமில்லாதோரும் சற்று நேரம் அதைக் கேட்கும் தருணத்தில் தங்களை மறந்து அதில் லயிக்க ஆரம்பிப்பர். அதுதான் நம் மண்ணின் இசைக்கான மகத்துவம். இசைவிழாவிற்கு புதுப்புது ரசிகர்கள் வரத்துவங்குவர். இதன் மூலம் நமது பாரம்பரிய இசை பல திசைகளுக்கும் பரவும் வாய்ப்பு உண்டாகும். கடந்த வருடங்களில் இப்படி வருகை தந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இசை விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வர ஆரம்பித்துவிட்டார்கள்.

முதியவர்களுக்கு முதல் மரியாதை:

இந்த இசை விழாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக, முதியவர்களுக்கு மரியாதை செய்யப்படுவது சிறப்பம்சம். சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள முதியோர் இல்லங்களில் இருந்து தினந்தோறும் 500 மூத்த குடிமக்கள் தனி பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு, காலை 7.00 மணிக்கு நடைபெறும் நாம சங்கீர்த்தனம், உபன்யாசம், பக்தி பிரசங்கம் போன்ற நிகழ்ச்சிகளை இலவசமாகக் கண்டு களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியவர்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு திரும்புகின்ற பொழுது அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் காபி வழங்குவதுடன் அத்தியாவசியப் பொருட்கள், ஆன்மிக புத்தகங்களின் குறிப்பேடுகள், முதலுதவி உபகரணங்கள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, கைத்துண்டு, குளிருக்கான ஆடைகள், பேனா, தொலைபேசிக் குறிப்புப் புத்தகங்கள் ஆகியன அடங்கிய விசேஷ கைப்பை ஒன்றும் வழங்கப்படுகிறது.

வெள்ள நிவாரண நிதி:
நம் உறவுகளுக்கு உதவுவோம்!

சமீபத்திய வரலாறு காணாத மழை வெள்ளம் சென்னை நகரையே புரட்டிப் போட்டிருக்கிறது. வீடு இழந்து, பொருள் இழந்து, உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு மக்கள் படுகின்ற துயரம் இந்த உலகையே உலுக்கியுள்ளது. மக்களின் துயர் துடைக்க அரசும் மனித நேயமிக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நிலைகளில் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கடும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி, இந்த ஆண்டு லஷ்மன் ஸ்ருதியின் ’சென்னையில் திருவையாறு’ குழுவினரும் ”ரோட்டரி இண்டர்நேஷனல் 3230” (ROTARY INTERNATIONAL 3230) அமைப்பும் இணைந்து வெள்ள நிவாரண நிதி திரட்ட ஆயத்தமாக உள்ளோம்.

வழக்கம் போல எட்டு நாட்கள் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று, நிகழ்ச்சிக்கு ஆதரவு தரும் ரசிகப்பெருமக்களிடமிருந்து தாராளமான நிதி உதவியை எதிர்பார்க்கிறோம். இத்துடன் நிகழ்ச்சி தயாரிப்புப் பணிகளுக்காக 15 ஆம் தேதி காலை முதலே அனைத்துப் பணியாளர்களும், ரோட்டரி சங்க தொண்டர்களும் காமராஜர் அரங்கிலேயே இருப்பார்கள் என்பதால் டிசம்பர் 15 முதல் 25 வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை காமராஜர் அரங்க வளாகத்தின் ஒரு பகுதியில் நிதி மற்றும் நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் திரட்டப்படுகிறது

பெருமழையினால் பாதிக்கப்பட்டு, பல்வேறு வழிகளில் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு, ஆதரவற்ற நிலையில் இருக்கும் நம் உறவுகளுக்கு நம்மால் இயன்ற அளவுக்கு பொருளாகவோ அல்லது பணமாகவோ அள்ளிக் கொடுப்போம் – அரவணைப்போம்!

நமது கர்நாடக இசையின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு, உலகின் எந்தவொரு இசைக்கும் நமது மண்ணின் சங்கீதம் குறைந்ததில்லை என்பதை பறைசாற்றும் வகையில் பத்திரிகையாளர்களாகிய உங்களின் பேராதரவை இவ்விழாவிற்கு நல்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்நிகழ்ச்சி பற்றிய விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணைய பக்கங்களுக்கு விஜயம் செய்யுங்கள்
www.chennaiyilthiruvaiyaru.com
https://www.facebook.com/Chennaiyilthiruvaiyaruofficial
http://www.lakshmansruthi.com/Food-Festival/index.asp

தொடர்புகள் மற்றும் ஆலோசனைகளுக்கு ct@lakshmansruthi.com
தொலைபேசியில் தொடர்பு கொள்ள: 044-44412345, 044-428 67778, 9941922322, 9841907711, 88070 44521

லஷ்மன் ஸ்ருதி நிறுவனம் – ஒரு சிறு குறிப்பு :

’லஷ்மன் ஸ்ருதி’ இசைக்குழு எனும் இந்த நிறுவனத்தை 1987ஆம் ஆண்டு முதல் 29 வருடங்களாக நடத்தி வருகின்றோம்.
எங்கள் இசைக்குழு 9000 – க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை உலகெங்கும் நடத்தியிருக்கிறது. 1994 ஆம் ஆண்டு 36 மணி நேரம் தொடர்ந்து இசை நிகழ்ச்சி என்ற உலக சாதனை இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினோம். தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் 25 நாடுகளுக்கு மேல் சென்று இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளோம்.

லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ்

எமது குழுவின் சார்பாக 2003 ஆம் ஆண்டு இசைக்கருவிகள் விற்பனை செய்வதற்காக ”லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ்” என்ற பெயரில் புதிய பாதையில் தடம் பதித்தது. இந்த இசை வளாகத்தில் இசைக்கருவிகள், ஒலி நாடாக்கள், ஆடியோ வீடியோ கேசட்டுகள், சி.டி.க்கள், டி.வி.டி.க்கள், இசை சம்பந்தமான புத்தகங்கள், நாட்டிய சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் இசைக்கலையுடன் உருவாக்கப்பட்டுள்ள பரிசுப்பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

எங்கள் இசை வளாகத்தில்
இசை ஒத்திகை அரங்கம் (Rehearsal Hall)
இசைப்பள்ளி (Music School)
இசைக்கருவிகள் பழுது பார்க்கும் மையம் (Musical Instruments Service)
இசைக் குழுக்களின் தேவைக்காகவும்,
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காகவும், இசை நடனம் மற்றும் பல்வேறு துறை ஆராய்ச்சியாளர்களுக்காகவும், திரைப்படத் துறையினரின் ஒலிப்பதிவு மற்றும் படப்பிடிப்புக்காகவும் இசைக்கருவிகளை வாடகைக்கு வழங்கும் பிரிவு (Rental Division)
லஷ்மன் ஸ்ருதி இணையதளம், இசை ரசிகர்களுக்கான தகவல்களை வாரி வழங்கும் லஷ்மன்ஸ்ருதி.காம் (www.lakshmansruthi.com)ஆகியவை இயங்கி வருகின்றன.

”சென்னையில் திருவையாறு” இசைவிழாவின் ஆதரவாளர்கள்:

சேனல் பார்ட்னர்
ஜீ தமிழ் தொலைக்காட்சி

மெயின்-ஸ்பான்சர்:
தன்ஜாரா

பவர்டு – பை:
ஆரோக்யா
நவீன்’ ஸ்

கோ-பிரசன்டட்-பை:
சத்யா

கோ ஸ்பான்சர்:
பாரத் யுனிவர்சிட்டி
சக்தி மசாலா
தி சென்னை ஹோம்ஸ்
சோலா எம்.எஸ்
வோடாஃபோன்

மீடியா ஸ்பான்சர்:
தினமலர்
தி ஹிந்து
ஆனந்த விகடன்

அசோசியேட் ஸ்பான்சர்:
வேல்ஸ் யுனிவர்சிட்டி
லஷ்மி விலாஸ் பேங்க்
ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
லலிதா ஜுவல்லரி
ஐடிபிஐ பேங்க்
ஸ்ரீ காளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ்
மெட்ரோ போலிஸ்
ஆந்திரா பேங்க்
மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ்

அஃபீஷியல்-ஸ்பான்சர்:
எஸ்.பி.எல்.டி – ஸ்ரீ பாக்யலட்சுமி டூர்ஸ் & டிராவல்ஸ்
ஏ.பி.எஸ்
சோல்டெக் எக்யூப்மென்ட்-சோலார் கருவிகள்
ரெப்கோ பேங்க்
செட்டிநாடு சிமெண்ட்
மதுரா டிராவல்ஸ்
கரூர் வைஸ்யா பேங்க்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
அலகாபாத் பேங்க்
எல்.ஐ.சி
செளபாக்யா
ஸ்ரீ கோகுலம் சிட்ஸ்
நாதெள்ளா ஜுவல்லரி
அரசு ஜுவல்ஸ் – கும்பகோணம்
சாமுண்டி சில்க்ஸ்
ஜுவல்ஒன்
நாயுடு ஹால்
பிரமா ஆர்ட்ஸ்

ரேடியோ பார்ட்னர்
சூரியன் எஃப் எம்

அஃபீஷியல் பி ஆர் ஓ
நிக்கில் கம்யூனிகேஷன்

நாலெட்ஜ் பார்ட்னர்:
ஸ்கில் ஏஞ்சல்ஸ்.காம்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்:
எம் 6 ஈவண்ட்ஸ்

ஸ்மார்ட் மீடியா பார்ட்னர்:
முகில் ஆப்

உணவுத் திருவிழாவிற்கான ஆதரவாளர்கள்

மெயின் – ஸ்பான்சர்:
சக்தி மசாலா

பவர்டு – பை:
அருள் அப்பளம்

கோ ஸ்பான்ஸர்:
ஹட்சன் கீ

அஃபீஷியல்-ஸ்பான்சர்:
நந்தினி ஸ்வீட்ஸ்

1 Comment

  1. Sir/Madam
    Can you please telecast all these programme in Jaya TV or vasanth TV of Sankara TV

    Kindly do the needful. It will be most useful for people who are residing out of Chennai

    Thanks & Regards

Leave a Response