பீச்சாங்கை – ஒரு நாளைய இயக்குனரின் சுதந்திரமான படைப்பு..!

peechankai poster

புதுமுக இயக்குனர் அசோக் இயக்கும் முதல் படம் பீச்சாங்கை. நாளைய இயக்குனர் சீசன் 4 இறுதி சுற்றுவரை சென்றவர். தற்பொழுது, இத்திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரை இயக்குனராக அடியெடுத்து வைக்கின்றார். இந்த படத்தில் கெளதம் மேனன் இயக்கிவரும் “அச்சம் என்பது மடமையடா” படத்தில் சிம்புடன் இணைந்து நடித்த கார்த்திக் ஆர்.எஸ். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

பீச்சாங்கை முதலில் குறும்படமாக உருவாகியுள்ளது. அந்த குறும்படத்தை பார்த்த இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனம் தானே முன்வந்து இப்படத்தை தயாரிப்பதாக கூறியுள்ளது. ஆனால், இயக்குனர் அசோக் வேண்டாம் என மறுத்துள்ளார். காரணம் என்ன என இயக்குனரிடம் கேட்டபோது, படத்தை முதலில் தயாரிப்பதாக கூறினர். ஆனால் என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அதில் பணிபுரிய வேண்டும் என விரும்பினேன். அதற்கு அந்த தயாரிப்பு நிறுவனங்கள் ஒத்துவரவில்லை. பிரபலமான கேமராமேன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் எனக்கூறினர். இதில் எனக்கு உடன்பாடு இல்லாததால், அவர்களின் தயாரிப்பில் இயக்க மறுத்துவிட்டேன். அது மட்டுமின்றி பிரபல நாயகர்களின் படங்கள் சில, பண பற்றாகுறையினால் பாதியிலேய நின்று போன கதைகளும் உண்டு. படத்தின் “பர்ஸ்ட் லுக்” சென்ற வியாழக்கிழமை வெளியிடப்பட்டது, “டீசர்” இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ளோம் என தெரிவித்தார்.

Satheesh Srini

Leave a Response