உருமாறிய விஜயகாந்த்; எல்லாம் எலக்சனுக்காக தான்..!

vijaykanth-thamilan-enru-sol

தமிழகத்தில் சினிமா கலைஞர்கள் அரசியலில் ஜெயிக்க முக்கிய காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள். காமராஜரை வீழ்த்தி தி.மு.க. என்ற கட்சியை தமிழகம் முழுவதும் ஓங்க செய்ததில் எம்.ஜி.ஆருக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. அதே தி.மு.க.வை வீழ்த்தி அ.தி.மு.க. என்ற கட்சியை துவங்கி முதல் தேர்தலிலேயே ஆட்சியை கைப்பற்றி ஒரு மிகப்பெரிய வரலாற்றை படைத்தவரும் எம்.ஜி.ஆர். தான். அதன் பிறகு கட்சி துவங்கிய எந்த சினிமா நடிகர்களாலும் அரசியலில் தாக்குபிடிக்க முடியவில்லை. ரஜினியே அரசியலில் குதிக்க தயங்கிய சமயத்தில் புலியாக அரசியலில் குதித்தவர் விஜயகாந்த். எம்.ஜி.ஆர். அளவு முடியவில்லை என்றாலும் அவருடைய கட்சிக்கு என்ற ஒரு ஓட்டுவங்கி உள்ளது. விஜயகாந்தை திரையில் பார்ப்பதற்கும், நேரில் பார்பதற்கு நிறைய மாறுதல்கள் இருப்பதாலோ என்னவோ?, அவருடைய அரசியல் வாழ்கையில் அவ்வப்போது சில சறுக்கல்கள் ஏற்படுகின்றன.

கட்சி ஆரம்பித்தபின் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த விஜயகாந்த் தற்பொழுது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் மகன் சண்முக பாண்டியனுடன் இணைந்து நடிக்க உள்ளார். படத்தின் போஸ்டரிலேயே மன்னர் வேடத்தில் அரியணையில் அமர்ந்த படி, வேட்டையன் மன்னன் தோரணையில் உள்ளார். இந்த படத்தின் பூஜை நாளை வடபழனி RKV ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது. இது ராஜா காலத்துப்படமாக இருந்தாலும், தற்போதைய அரசியல் அவலங்களையும், தமிழகத்தின் தேவைகளையும், சுட்டிக்காட்டும் படமாக எடுக்க உள்ளார்களாம். அதிலும் ஆளும் கட்சிக்கு எதிராவே எடுக்க உள்ளார்களாம். வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு தான் இந்த படத்தில் நடிக்க விஜயகாந்த் முடிவு செய்தாராம். எனவே தான் அரசியல்வாதி மீண்டும் சினிமாகாரராக உருமாறக்காரணம். பொறுத்திருந்து பார்ப்போம், இந்த படம் தமிழக சட்டசபை தேர்தலில் புரட்சியை ஏற்படுத்துமா? என்று.

Satheesh Srini

Leave a Response