இயக்குனர் கார்த்தி கப்பலில் ஏறவிருக்கிறார் உதயநிதி:

சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட திரைப்படம் கப்பல். இப்படத்தை அவருடைய உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்தி இயக்கினார். இப்படத்தில் வைபவ் மற்றும் சோனம் பஜ்வா நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஓரளவுக்கு இளைஞர்கள் மத்தியில், அடல்ட் காமடி காரனத்திற்காக வரவேற்ப்பு பெற்றது.

சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் கார்த்தி நடிகர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ஒரு கதையை சொல்லியுள்ளார். அந்த கதையை கேட்ட உதயநிதி கவர்ந்துள்ளத அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றன. உதநிதி நடித்துள்ள “நண்பேண்டா” திரைப்படம் முடிவு பெற்ற நிலையில் வெளியீடுக்கு தயார் நிலையில் உள்ளது.

தற்போது உதயநிதி அகமத் இயக்கத்தில் “இதயம் முரளி” மற்றும் திருக்குமரன் இயக்கத்தில் ஒரு பெயரிடாத படத்தில் நடித்துகொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களும் முடித்த பின்னர் கப்பல் கார்த்தியின் புதிய படத்தில் உதயநிதி பயணிப்பார் என நம்பத்தகுந்த வட்டரக்ங்கள் சொல்கின்றன.