லதா ரஜினியின் பான்கார்ட்’ல் உள்ள பிறந்த தேதிக்கும் டின்’ல் உள்ள பிறந்த தேதிக்கும் பொருத்தமின்மை…!

மீண்டும் ஒரு சிக்கலில் தெரிந்தோ தெரியாமலோ சிக்கியுள்ளார் லதா ரஜினிகாந்த். கோச்சடையான் படம் சம்பந்தமாக மீடியா ஒன் குளோபல் என்டர்டெயன்மென்ட் தொடர்ந்த வழக்கில் லதாரஜினி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள திருமுடிவாக்கத்தில், தனக்கு சொந்தமான சொத்தை, 22 கோடி ரூபாய் கடனுக்காக பிணையாக கொடுத்திருந்தார்.

ஆனால் இந்தியஅரசின், கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம் சம்பந்தமான வெப்சைட்டில் நாம் சோதித்து பார்த்தபோது, அதில் லதாரஜினியின் பான்கார்ட்’ல் உள்ள பிறந்த தேதிக்கும் ‘டின்’ல் உள்ள பிறந்த தேதிக்கும் பொருத்தமின்மை தெரிய வந்தது.

அதுமட்டுமின்றி, அவரது முதல் மற்றும் கடைசிபெயர்கள் அவரது பான்கார்ட்’க்கும், ‘டின்’க்கும் பொருத்தமின்றி உள்ளன. லதாரஜினியின் தந்தையார் பெயரும் முழுமையாக பதியப்படவில்லை போல் தெரிகிறது.

இந்த இரண்டு ஆவணங்களிலும் தன்னைப்பற்றிய விபரங்களில் உள்ள மாறுபாடுகள் பற்றி, லதாரஜினிக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டா, இல்லையா என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை.